சந்திரகலாவிற்கு தக்க பதிலடி கொடுக்கும் தமிழ் – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” எபிசோட்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று தமிழ் வசுந்தராவின் அம்மா சந்திரகலாவிடம் இந்த திருமணம் தனது அம்மாவின் விருப்பத்தின் படியே நடைபெறும் என்று கூறிவிட்டு சென்று விடுகிறார்.
“தமிழும் சரஸ்வதியும்” சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய சீரியலான “தமிழும் சரஸ்வதியும்” இல் இன்று தமிழை சந்திரகலாவிடம் பேச வேண்டும் என்று கார்த்தி அழைத்து செல்கிறார். அங்கு தாங்கள் வசதியான குடும்பம் என்றும், அதனால் வசுந்தரா – கார்த்தி இருவரது திருமணமும் சீக்கிரமாக நடைபெற வேண்டும் என்று கூறுகிறார். இதனை கேட்டு கோபம் அடையும் தமிழ் தனது அம்மாவிடம் இவர்களது திருமணம் பற்றி பொறுமையாக எடுத்து கூற வேண்டும் என்றும், தனது அம்மாவிற்கு வசுந்தரவையும் இந்த திருமணத்தையும் பிடித்தால் மட்டுமே திருமணம் நடைபெறும் என்று கூறி விட்டு சென்று விடுகிறார். தமிழின் இந்த செயல் சந்திரகலாவை கோபம் அடைய வைக்கிறது.
சந்தியாவின் காய்ச்சல் நாடகம், சமரசம் ஆவாரா சரவணன்? இன்றைய ‘ராஜா ராணி 2’ எபிசோட்!
தனது தம்பி கார்த்தியை சொல்லாமல் வசுந்தரா வீட்டிற்கு அழைத்து சென்றதற்கு திட்டவும் செய்கிறார். பின், இவர்களது திருமணம் பற்றி பேச அவரது அப்பாவை தனது நண்பர் மூலம் வரவழைக்கிறார். பின், அவரிடம் கார்த்தி காதலிக்கும் விஷயத்தை தமிழ் கூறுகிறார். இதனால் அதிர்ச்சி அடையும் அவரது அப்பா, இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி எழுந்து செல்கிறார். ஆனால், கார்த்திக்கு ஆதரவாக தமிழ் பேசுகிறார். இது குறித்து தனது மனைவியிடம் பேச முடியாது என்று மறுக்கிறார்.
TN Job “FB Group” Join Now
தமிழ் அவரை சமாதானம் செய்து அம்மாவிடம் பொறுமையாக எடுத்து கூறினால், புரிந்து கொள்வார் என்று தனது தந்தைக்கு ஆறுதல் அளிப்பது போல பேசுகிறார். சரவஸ்தி தனது தங்கை பிறந்தநாளிற்கு என்று அவருக்கு பிடித்த உடையை வாங்கி தருகிறார். இதனை முதலில் ஏற்க மறுக்கும் காவியா, தனது அக்காவின் வற்புறுத்தலுக்கு இணங்க உடை அணிந்து அவருடன் வெளியே ஊர் சுத்த செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.