சந்திரகலா வீட்டிற்கு தமிழை அழைத்து செல்லும் தம்பி கார்த்தி – இன்றைய ‘தமிழும் சரஸ்வதியும்’ எபிசோட்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று தமிழை தனது திருமணம் குறித்து பேச சொல்லி கார்த்திக் வசுந்தரா வீட்டிற்கு அழைத்து செல்கிறார். தமிழுக்கு பெண் பார்க்க அவரது அம்மா கோதை பெண் வீட்டிற்கு செல்கிறார்.
“தமிழும் சரஸ்வதியும்” சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று தமிழுக்கு பெண் பார்க்க வேண்டும் என்று அவரது அம்மா கோதை மற்றும் அவரது அப்பா இருவரும் கிளம்புகின்றனர். முதலில், பெண்ணை தங்களுக்கு பிடித்ததற்கு பிறகே, தமிழை அழைத்து கொண்டு பெண் பார்ப்பதற்கு செல்லலாம் என்று முடிவு எடுக்கின்றனர்.
இருவரும் தாங்கள் நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்ல இருக்கிறோம் என்று கூறி விட்டு செல்லுகின்றனர். பின், சரஸ்வதியின் தங்கை காவியாவிற்கு பிறந்தநாள் என்று குடும்பத்தினர் அவருக்கு பரிசுகளை வழங்குகின்றனர். ஆனால், சரஸ்வதி பரிசு கொடுக்காததை அவரது தம்பி குத்தி காட்டுகிறார். இதனால் அவரது பாட்டி டென்ஷன் ஆகி அவரை திட்டுகிறார். பின், தனது பேத்தி ஒரு நாள் அனைவரும் வியக்கும் அளவிற்கு நன்றாக வாழ்வாள் என்றும் கூறுகிறார். பின், சரஸ்வதி தனது தங்கை மற்றும் தோழியுடன் வெளியே செல்கிறார்.
TN Job “FB Group” Join Now
பின், கார்த்தி தனது அண்ணன் தமிழை முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று அழைத்து சென்று வசுந்தராவை பற்றி கூறாமல் அவர்களது வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அங்கு போய் வசுந்தராவை பார்த்து தமிழ் குழம்புகிறார். பின், கார்த்தி வசுந்தராவை தனது காதலி என்றும் தான் 2 வருடங்களாக காதலிப்பதாகவும் கூறுகிறார். இதனால் உச்சகட்ட அதிர்ச்சி அடையும் தமிழ், தன்னை எதற்காக இங்கே அழைத்து வந்திருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு கார்த்திக் வசுந்தராவின் அம்மா சந்திரகலாவிடம் தனது திருமணம் குறித்து பேச வேண்டும் என்று அடுத்த அதிர்ச்சியினை கொடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.