தனது காதலியை சந்திப்பாரா தமிழ், சரஸ்வதியின் வாக்கு உண்மையாகுமா? இன்றைய எபிசோட்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று சரஸ்வதி சொன்னதை கடவுள் சொன்னதாக தமிழ் தனது நண்பர் நமச்சியிடம் கூறுகிறார் தமிழ். பின், சரஸ்வதியை சாப்பிட சொல்லி லிங்கம் தனது மனைவிடம் கூறுகிறார்.
“தமிழும் சரஸ்வதியும்” சீரியல்
இன்று “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் தமிழ் தனது நண்பர் நமச்சியிடம் தனக்கு கடவுள் வரம் தந்திருந்தாக கூறுகிறார். இதனை கேட்டு குழப்பம் அடையும் அவரது நண்பர், இது எப்படி சாத்தியம் என்று கேட்கிறார். பின், அவருக்கு தமிழ் கோவிலில் நடந்த அனைத்தையும் கூறுகிறார். இதனை கேட்டு சிரிக்கும் அவரது நண்பர் இப்படியே நடக்காது என்று கூறுகிறார். இதனால் தமிழ் சோர்வடைந்து விடுகிறார்.
பின், அவரது நண்பர் சென்னையில் மழை பெய்வதே அரிது என்றும் அப்படி மழை பெய்து ஒரு பெண்ணை தொடர்ந்து பார்த்தால் அப்போது அது கடவுள் சொன்னது என்று ஒத்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார். முதலில், மழை பெய்யட்டும் பின், மற்றதை பார்த்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார். இதனை தமிழும் ஏற்று கொள்ளுகிறார்.
ஹேமா குணமடைய கண்ணம்மா தான் மருந்து, டாக்டர் சொல்வதை ஏற்பாரா பாரதி? வெளியான ப்ரோமோ!
பின், சரஸ்வதி சாமி கும்பிட்டு விட்டு வீட்டிற்கு நடந்து வருகிறார். தமிழுக்கு அப்படி கூறியது தனது மனநிம்மதியினை தருகிறது என்று தனது தோழியிடம் கூறுகிறார். பின், நடந்து வரும் போது டீ கடையில் மசால் வடை போடுகின்றனர். அதனை பார்த்து சரஸ்வதிக்கு மனம் மாறுகிறது. பின், தனது தந்தை கூறியது நினைவிற்கு வந்ததும், சாப்பிடாமல் வீட்டிற்கு வந்து விடுகிறார். வீட்டில் அவரது பாட்டி சரஸ்வதியை சாப்பிட சொல்லி வற்புறுத்துகிறார். அவருக்காக பிரியாணி வாங்கி வந்ததாகவும் கூறுகிறார். ஆனால், சரஸ்வதி அதனை காதில் வாங்காமல் படிக்க சென்று விடுகிறார். அப்போது சரஸ்வதியின் அம்மா போன் செய்து சாப்பிட சொல்லுகிறார்.
TN Job “FB Group” Join Now
சரஸ்வதி சாப்பிட்டால் தான் பாட்டியும் சாப்பிடுவார் என்பதால் சாப்பிட சொல்லி வற்புறுத்துகிறார். பின், சரஸ்வதியும் சரி என்று சாப்பிட்டு விடுகிறார். அப்போது சரஸ்வதி சாப்பிட்டு விட்டதாக லிங்கத்திடம் சரஸ்வதியின் அம்மா கூறுகிறார். அப்போது தான் அவர் நிம்மதி அடைகிறார். பின், சரஸ்வதியின் அம்மா அவரது கணவர் லிங்கத்திடம் சென்று சரஸ்வதியின் மேல் இவ்வளவு அன்பு வைத்தும் அதனை ஏன் அவளிடம் காட்டவில்லை என்று கேட்கிறார். அதற்கு லிங்கம் அப்படி காட்டினால் அவள் படிப்பில் கவனம் செலுத்தமாட்டாள் என்று கூறி விடுகிறார்.