பிட் பேப்பரால் மாட்டிக் கொள்ளும் சரஸ்வதி, தவறாக புரிந்து கொள்ளும் தமிழ் – இன்றைய எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “தமிழும், சரஸ்வதியும்” சீரியலில் இன்று கோதை மனதினை மாற்ற தமிழ் மற்றும் அவரது அப்பா இருவரும் முயற்சி செய்கின்றனர். சரஸ்வதி இன்று தேர்வு எழுதுவதற்காக எக்ஸாம் ஹால் செல்லுகிறார்.
இன்றைய எபிசோட்:
இன்று “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் கோதைக்கு சிறந்த தொழிலாளர் என்ற விருது வழங்கப்பட இருக்கிறது. இதனால் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அதனை கொண்டாடவும் செய்கின்றனர். இதற்கு காரணம் வசுந்தராவை பெண் பார்த்து விட்டு வந்தது தான் என்று தமிழ், அவரது அப்பா மற்றும் கார்த்தி மூவரும் கூறுகின்றனர். தங்களது உழைப்பின் காரணமாக தான் கிடைத்தாலும், ராசி என்ற ஒன்று இருக்கிறது என்று கூறுகின்றனர். இதனை கேட்டு கோதை குழப்பம் அடைகிறார். பின்னர், தங்களது தொழிலாளர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று அனைவருக்கும் தங்க நாணயம் வழங்கலாம் என்று முடிவு எடுக்கின்றனர்.
இனி 24 மணிநேரமும் வங்கிகளில் NACH வசதி – வாடிக்கையாளர்கள் நிம்மதி!
அதே போல் தமிழ் தான் படித்த பள்ளிக்கு எதாவது உதவித்தொகை போல வழங்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். அதனால் தனது அம்மாவிடம் கூறி பணத்தினை எடுத்து கொண்டு பள்ளிக்கு செல்கிறார். அதே பள்ளிக்கு தேர்வு எழுதுவதற்காக சரஸ்வதி வருகிறார். சரஸ்வதிக்கு அனைத்து கேள்விகளும் தெரியும் என்பதால் மகிழ்ச்சியுடன் எழுத தொடங்குகிறார். அப்போது அவருக்கு அருகில் இருப்பவர் பிட் பேப்பரை எடுத்து சரஸ்வதியின் பக்கம் எரிந்து விடுகிறார். அதனை பற்றி தெரியாத சரஸ்வதி அதனை என்னவென்று எடுத்து பார்க்கிறார், அப்போது இதனை கவனித்து விடும் ஆசிரியர் அவரிடம் இருக்கும் பிட்டை பறித்து, அது சரஸ்வதி தான் கொண்டு வந்து இருக்கிறார் என்று தவறாக புரிந்து கொள்கிறார்.
TN Job “FB Group” Join Now
இதனால் அதிர்ச்சி அடையும் சரஸ்வதி தான் இதனை செய்யவில்லை என்று அவர்களிடம் கூறி கொண்டே வருகிறார். ஆனால், அவர்கள் அனைவரும் சரஸ்வதி கூறுவதை நம்ப மறுத்து விடுகின்றனர். அப்போது அந்த வழியாக வரும் தமிழ், சரஸ்வதி இருக்கும் நிலையினை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிந்து விடுகிறது.