சரஸ்வதிக்கு பாடம் சொல்லி கொடுத்து நொந்து விடும் அருண் – இன்றைய எபிசோட்!
இன்று “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் கோதையை சமாளித்து வசுந்தராவின் வீட்டிற்கு அழைத்து செல்ல தமிழ் மற்றும் அவரது அப்பா முடிவெடுக்கின்றனர். சரஸ்வதிக்கு இனி பாடம் சொல்லி கொடுக்க முடியாது என்று அவரது தம்பி அருண் கூறி விடுகிறார்.
“தமிழும் சரஸ்வதியும்” சீரியல்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று தமிழ் கூறிய ஐடியாவின் படி அவரது அப்பா கோதையிடம் கார்த்திக்கு திருமணம் நடைபெற்றால் தான் தமிழுக்கு நடைபெறும் என்று ஜோசியர் கூறியதாக கூறுகிறார். இதனை கேட்டு கோதை கவலை அடைந்து விடுகிறார். பின்னர், அனைவரும் சமாதானம் செய்ததும் சரி என்று கூறி விடுகிறார். வசுந்தராவின் வீட்டிற்கு சென்று பெண் பார்க்கலாம் என்று அவரது கணவர் கூறியதும், முதலில் தயங்கும் கோதை பின்னர் சரி என்று கூறி விடுகிறார். இதனால் கார்த்தி, தமிழ் மற்றும் அவரது அப்பா மூவரும் மகிழ்ச்சி அடைந்து விடுகிறார்.
நடிகர் அஜித் நடித்த “வலிமை” பட பாடல் – இன்று இரவு 9 மணிக்கு வெளியீடு!!
தமிழின் அப்பா வசுந்தராவின் மாமாவிடம் பேச வேண்டும் என்று கூறுகிறார். தமிழின் அப்பா பேசியதும், வசுந்தராவின் அம்மா மகிழ்ச்சி அடைந்து விடுகிறார். பின்னர், தமிழின் அம்மாவிடம் பேச வேண்டும் என்று கூறுகிறார். கோதை அப்போது வேலையாக இருந்த காரணத்தால், அவரால் போன் பேச முடியாது என்று கூறி விடுகிறார். இதனை போனில் கேட்டு விடும் வசுந்தரா கோபம் அடைந்து விடுகிறார். பின், சரஸ்வதிக்கு அருண் பாடங்களை கற்று கொடுப்பதாக வாக்கு கொடுத்திருந்ததை அடுத்து, அவருக்கு பாடம் நடத்த வருகிறார். அதன் பின்னரே, சரஸ்வதிக்கு ஒன்றுமே தெரியாது என்பதனை தெறித்து கொள்கிறார். தான் எதற்காக சரஸ்வதிக்கு சொல்லி கொடுக்கிறேன் என்று வாக்கு கொடுத்தோம் என்பதனை நினைத்து நொந்து போய் விடுகிறார்.
TN Job “FB Group” Join Now
பின்னர், அருண் அனைவர் முன்பும் சரஸ்வதியை திட்டி விடுகிறார். சரஸ்வதிக்கு ஒன்றுமே தெரியவில்லை என்றும், தான் கற்றுக் கொடுத்தால் அனைத்தையும் மறந்து விடுவேன் என்று கூறுகிறார். இதனால் சரஸ்வதி மிகவும் கவலை அடைந்து விடுகிறார். அவரை பாட்டி சமாதானம் செய்து விடுகிறார். தமிழ் வீட்டினர் அனைவரும் வசுந்தராவின் வீட்டிற்கு சென்று விடுகின்றனர். அனைவரையும் வசுந்தராவின் அண்ணன் ஆதி வரவேற்கிறார். அனைவரும் அமர்ந்ததும், வசுந்தரா அம்மா சந்திரகலா வந்து விடுகிறார். சந்திரகலாவை பார்த்தும் கார்த்தி எழுந்து நிற்கிறார். இதனால் கோதை அதிர்ச்சி அடைந்து அவரை உட்காருமாறு கூறுகிறார். சந்திரகலா மற்றும் கோதை இருவரும் நேராக சந்தித்து கொள்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.