கார்த்தி, வசுந்தரா திருமணத்தை நடத்த முயலும் சந்திரகலா – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” எபிசோட்!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று கூடிய விரைவில் கார்த்தி மற்றும் வசுந்தராவின் திருமணம் விரைவாக நடைபெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார். தமிழ் மற்றும் கார்த்தி இருவரிடமும் கோதை தான் பெண் பார்த்த விஷயத்தினை கூறுகிறார்.
இன்றைய எபிசோட்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று சரஸ்வதி மகிழ்ச்சியுடன் தான் கோச்சிங் சென்டரில் சேர்ந்த விஷயத்தினை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்கிறார். இந்த முறை கண்டிப்பாக தான் தேர்வில் பாஸ் செய்து விடுவேன் என்றும் கூறுகிறார். இதனை கேட்டு விட்டு அனைவரும் சரஸ்வதியினை உற்சாகப்படுத்துகின்றனர். பின்னர், கார்த்தி மற்றும் வசுந்தராவின் திருமணம் உடனடியாக நடைபெற வேண்டும் என்று சந்திரகலா கூறுகிறார். கார்த்தி இது குறித்து எதுவுமே கூறாமல் இருப்பதால் சந்திரகலாவிற்கு கோபம் வருகிறது. இதனால் அவரை திட்டி விட்டு சென்று விடுகிறார்.
கருணாஸ் மகனுடன் ஆல்பம் சாங்கில் இணையும் “சித்தி 2” சீரியல் நடிகை – வெளியான தகவல்!!
கார்த்தி மற்றும் வசுந்தரா இருவரும் தனியாக பேசுகின்றனர். அப்போது கார்த்தி தனது அம்மா வசுந்தராவிடம் கூறிய அனைத்தையும் கூறுகிறார். இதனை கேட்டு வருத்தப்படும் கார்த்தி வசுந்தராவை திருமணம் செய்வதில் உறுதியாக இருக்கிறார். பின்னர் அங்கு வரும் சந்திரகலா நாளை கார்த்தி மற்றும் வசுந்தரா இருவரது திருமணத்தையும் நடத்த தான் திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார். இதனை கேட்டு இருவரும் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர். ஆனால், சந்திரகலா தனது முடிவில் உறுதியாக இருக்கிறார்.
TN Job “FB Group” Join Now
தமிழ் வீட்டில் கோதை அனைவருக்கும் ஸ்வீட் கொடுக்கிறார். தமிழ் மற்றும் கார்த்தி இருவருக்கும் ஒரே இடத்தில் பெண் பார்த்து இருப்பதாக கூறுகிறார். இதனால் அனைவரும் உற்சாகம் அடைவார்கள் என்று நினைக்கையில் கார்த்தி, தமிழ் மற்றும் அவர்களது அப்பா மூவரும் சோகமாக இருக்கின்றனர். இது குறித்து மூவரும் எதோ சொல்லி சமாளித்து விடுகின்றனர். இந்த சம்பத்தினை தவிர்க்க வேண்டும் என்று மூவரும் யோசிக்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.