தமிழ் & கார்த்தி இருவருக்கும் பெண் பார்த்து விடும் கோதை – இன்றைய எபிசோட்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” தொடரில் இன்று தமிழ் மற்றும் கார்த்தி இருவருக்கும் ஒரே இடத்தில் கோதை பெண் பார்க்கிறார். இதனால் தமிழின் அப்பா வருத்தத்தில் இருக்கிறார்.
இன்றைய எபிசோட்:
“தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று கோதை மற்றும் அவரது கணவரின் பால்யகால நண்பர் ஒருவர் வருகிறார். கோதை விருது வாங்கியதற்காக அவரை பாராட்டி விட்டு மூவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது தனது பெண்களை பற்றி வந்தவர் கூறுகிறார். அவருக்கு இரு பெண்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்கள் இருவரும் தனது கம்பெனியை நிர்வாகித்து வருகின்றனர் என்று கூறுகிறார். இதனால் கோதைக்கு ஒரு யோசனை வருகிறது. தமிழ் மற்றும் கார்த்தி இருவருக்கும் இரு பெண்களையும் கேட்கலாம் என்று தனது கணவரிடம் கூறுகிறார். தமிழின் அப்பாவிற்கு இதனை கேட்டு ஒரு மாதிரி ஆகி விடுகிறது.
“குக் வித் கோமாளி” சிவாங்கிக்கு எப்போது திருமணம்? அவரே சொன்ன தகவல்!
ஆனால், கோதை அடுத்து செய்யவிருக்கும் விஷயங்கள் பற்றி பேசுகிறார். தான் கோவில் சென்று வருவதாகவும் கூறுகிறார். அப்போது வசுந்தராவை சந்திக்கும் கோதை மிகவும் மகிழ்ச்சி அடைந்து விடுகிறார். வசுந்தராவை தான் பார்த்த முதல் நாளில் இருந்து தனக்கு பிடித்து இருந்ததாக கோதை கூறுகிறார். இதனால் வசுந்தரா மகிழ்ச்சி அடைகிறார். பின்னர், கோதை இரு வீட்டினருக்கும் வசதி விகிதத்தில் வித்தியாசம் இருந்த காரணத்தால் தான் திருமணம் வேண்டாம் என்று தான் நிராகரித்ததாக கூறுகிறார். பின்னர், கார்த்திக்கு திருமண வரன் ஒன்று அமைந்திருப்பதை பற்றி கூறி விட்டு சென்று விடுகிறார். இதனை கேட்டு வசுந்தரா அதிர்ச்சி அடைந்து விடுகிறார்.
TN Job “FB Group” Join Now
பின்னர், தமிழ் கோவிலுக்கு சரஸ்வதியை சந்திக்க செல்கிறார். அங்கு சரஸ்வதி தனது அப்பா தன்னிடம் பேசாதது பற்றி நினைத்து வருந்துகிறார். தமிழ் சரஸ்வதியிடம் வந்து மன்னிப்பு கேட்கிறார். தான் அன்று அப்படி கூறியததால் தானே இவ்வாறு நடந்து விட்டதாக கூறுகிறார். அப்போது சரஸ்வதியின் தோழி தமிழை நன்றாக திட்டி விடுகிறார். இதனை கேட்டு சரஸ்வதி தமிழுக்கு ஆதரவாக பேசுகிறார். இதனால் தமிழுக்கு சந்தோசம் வந்து விடுகிறது. கூடிய விரைவில் சரஸ்வதியின் தந்தை அவரிடம் பேசுவதற்கு தான் வழிவகை செய்வேன் என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிந்து விடுகிறது.