சரஸ்வதி பிட் அடித்த விஷயத்தை பற்றி தெரிந்து கொள்ளும் அப்பா – இன்றைய எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று சரஸ்வதி பரிட்சையில் பிட் அடித்த விஷயம் லிங்கத்திற்கு தெரிய வருகிறது. இதனால் கோபம் அடைந்து சரஸ்வதியை வீட்டை விட்டு வெளியே செல்ல சொல்லுகிறார்.
“தமிழும் சரஸ்வதியும்” சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று சரஸ்வதி பிட் அடித்து மாட்டி கொண்டு பரீட்சை எழுதாத விஷயம் பற்றி லிங்கம் தெரிந்து கொள்கிறார். இதனால் அவ்ருக்கு கோபம் வந்து விடுகிறது. சரஸ்வதியை இனி மன்னிக்கவே போவதில்லை என்று கூறி வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்து லிங்கத்தினை சமாதானம் செய்கின்றனர். ஆனால், இந்த முறை தான் இது பற்றி நன்றாக முடிவு எடுத்து விட்டதாக லிங்கம் கூறுகிறார். சரஸ்வதியும் தான் வீட்டை விட்டு வெளியே செல்ல தயார் என்று கூறுகிறார்.
காதல் வாழ்க்கையை கேக் வெட்டி கொண்டாடும் அர்ஜுன், ரோஜா – இன்றைய எபிசோட் ப்ரோமோ!
பின்னர், அனைவரும் சமாதானம் செய்கின்றனர். தமிழ் வீட்டில் அனைவரும் கோதையை சமாதானம் செய்கின்றனர். வசுந்தராவை இந்த வீட்டு மருமகளாக வரவழைக்க அனைவரும் விரும்புவதாக தமிழின் அப்பா கூறுகிறார். ஆனால், சந்திரகலா ஒரு நண்பர் என்ற முறையில் வந்து தான் தன்னை வாழ்த்தி விட்டு சென்றதாகவும், அதனால் திருமணம் பற்றி இனி யாரும் பேச வேண்டாம் என்று கூறி விடுகிறார். இதனால் கார்த்தி மிகவும் சோகமடைந்து விடுகிறார்.
TN Job “FB Group” Join Now
அவரை தமிழ் மற்றும் அவரது அப்பா இருவரும் சமாதானம் செய்கின்றனர். பின்னர், காலையில் சீக்கிரமாக எழுந்து சரஸ்வதி படிக்க ஆரம்பிக்கிறார். இதனை பார்க்கும் குடும்பத்தினர் அனைவரும் ஆச்சரியம் அடைகின்றனர். சரஸ்வதியின் அம்மா தனக்கு தனது பெண்ணை பற்றி தெரியும் என்று கூறி அவரை உற்சாகப்படுத்துகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.