கோதைக்கு வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கும் சந்திரகலா – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” எபிசோட்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று தமிழ் தான் சரஸ்வதியை சந்தித்தது மற்றும் மழை பெய்தது பற்றியும் தனது நண்பரிடம் கூறுகிறார். சந்திரகலா கோதை விருது வாங்கியதற்காக அவருக்கு பரிசு வழங்கி தனது வாழ்த்தினை தெரிவிக்கிறார்.
“தமிழும் சரஸ்வதியும்” சீரியல்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று தமிழ் தான் சரஸ்வதியை பார்த்ததை பற்றியும், சரஸ்வதியின் படிப்பு பற்றியும் தனது நண்பரிடம் கூறுகிறார். இதனை கேட்கும் அவர், இருவரும் சரியான ஜோடி தான் என்றும் சாமி சொன்னது சரி தான் என்றும் கூறுகிறார். இதனால் குழப்பம் அடையும் தமிழ் தனக்கு நன்றாக படித்த பெண் தான் கிடைப்பாள் என்று சாமி கூறியதாக கூறுகிறார். ஆனால், தமிழை சமாதானம் செய்யும் அவரது நண்பர் அவரை கோவிலுக்கு அழைத்து செல்லுகிறார்.
அப்போது சரஸ்வதியும் தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு வருகிறார். இதனால் மகிழ்ச்சி அடையும் அவரது நண்பர் இருவரும் வாழ்வில் இணைய வேண்டும் என்று கடவுளிடம் பிராத்தனை செய்கிறார். பின்னர், தமிழின் அம்மா விருது வாங்கியதை பாராட்ட வசுந்தரா அம்மா சந்திரகலா அவர்களது வீட்டிற்கு வருகிறார். வசுந்தராவை திருமணம் செய்து கொண்டால் தான் பாராட்ட வேண்டுமா? எனக்கு தெரிந்த ஒரு நண்பராக நீங்கள் மாறி உள்ளீர்கள், அதனால் தான் வீட்டிற்கு வந்தேன் என்று கூறுகிறார். இதனால் மகிழ்ச்சி அடையும் தமிழின் அப்பா அவரை வீட்டிற்குள் அழைத்து உபசரிக்கிறார்.
TN Job “FB Group” Join Now
தமிழ் வீட்டினர் தனது மகள் வசுந்தராவை வேண்டாம் என்று கூறியதை கேட்டு வசுந்தரா இரு நாட்கள் மிகவும் கவலையாக இருந்ததாகவும், பின்னர் தான் பேசியதும் சரியானதாக சந்திரகலா கோதையிடம் கூறுகிறார். இதனை கேட்டு கோதைக்கு என்னவோ போல ஆகி விடுகிறது. பின்னர், வசுந்தரா கோதைக்கு ஒரு பரிசு அனுப்பி இருப்பதாக கூறி சந்திரகலா அவரிடம் ஒரு பேனாவை தருகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.