மயக்கம் தெளிந்து கண் விழித்த கோதை, ரத்தம் கொடுக்கும் தமிழ் – ‘தமிழும் சரஸ்வதியும்’ ப்ரோமோ!
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழ் தன்னை ஏமாற்றி விட்டதாக நினைத்து உடல் நிலை சரியில்லாமல் போன கோதை மீண்டும் கண் விழிப்பது போல் ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இந்த வார எபிசோடிற்கான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சீரியல் ப்ரோமோ:
தமிழும் சர்வதியும் சீரியலில் கடந்த சில வாரங்களாக தமிழ் மற்றும் சரஸ்வதியின் திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததால் மிகவும் கலகலப்பான காட்சிகள் ஒளிபரப்பானது. மேலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும், திருமணத்திலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து வந்து கலந்து கொண்டதை போல் காட்சிகள் வந்தது. இவை அனைத்தும் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. இந்நிலையில், தான் திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று சந்திரகலா மற்றும் கோதையின் அண்ணி இருவரும் சேர்ந்து பல வேலைகளை பார்த்து வந்தனர்.
விவாகரத்துக்கு பிறகு காதலர் தினத்தில் ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படம் – வைரலாகும் பதிவு!
ஆனால் கடைசியில் தான் சரஸ்வதி 12வது பெயில் என்ற விஷயம் தெரிய வந்தது. அப்போது கோதையின் அண்ணிக்கு விபத்து நடந்து, மருத்துவமனையில் சேர்த்து விடுகின்றனர். இந்த விபத்தினால் அவருக்கு பேச்சு வரவில்லை. ஆனாலும் கல்யாணம் முடிந்த சமயத்தில் மருத்துவமனையில் இருந்து தப்பித்து வந்து, இந்த விஷயத்தை சந்திரக்கலவிடம் சொல்ல, அவர் அதை கோதையிடம் சொல்கிறாள். இந்த பொய்யை சற்றும் எதிர்பார்க்காத கோதை சரஸ்வதி படிக்கவில்லை என்கிற விஷயம் தெரிந்ததும் மயங்கி விழுகிறார்.
விஜய் டிவி மதிய நேர சீரியல்களில் நேர மாற்றம் அறிவிப்பு – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
கோதை சுயநினைவை இழந்த நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். சில நாட்கள் தொடர்ந்து கண்விழிக்காமல் இருக்கும் கோதை திடீரென்று கண் விழிக்கிறார். தமிழ் அம்மாவை பார்க்க வருகிறார். தமிழை பார்த்ததும் கோதை மீண்டும் சீரியசாக ஆகிறார். இதனால் அனைவரும் தமிழை விரட்டுகின்றனர். அதன் பிறகு கோதைக்கு தேவையான ரத்தத்தை தேடி அழைக்கின்றனர். இதனால் யாருக்கும் தெரியாமல் தமிழ் தனது அம்மாவிற்கு தான் ரத்தம் கொடுப்பதாக கூறி, மருத்துவரிடம் வேண்டுகிறார்.