விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – கோதையிடம் நியாயம் கேட்கும் பாட்டி!
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், சரஸ்வதி வீட்டில் அவரை முழுமையாக ஏற்றுக் கொண்டு இருப்பதாக நினைக்க அது உண்மை இல்லை என தெரிந்த பாட்டி கோதையிடம் கோவமாக பேசுகிறார். ஆனால் பாட்டியை கூட கோதை அவமானப்படுத்துவது பற்றிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
தமிழும் சரஸ்வதியும்:
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழ் சரஸ்வதி காதல் திருமணம் செய்ததால் அவர்களை கோதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார். இப்படி இருக்க தமிழ் வீட்டை விட்டு வெளியே போக கூடாது என்பதற்காக அவரை கடமைக்கு வீட்டில் தங்க வைத்து இருக்கின்றனர். ஆனால் கோதை அவர்களை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில் சரஸ்வதி வீட்டில் தமிழ் சரஸ்வதியை கோதை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டு இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
விஜய் டிவி சீரியல்களை பின்னுக்கு தள்ளிய சன் டிவியின் ‘கயல்’ – இந்த வார TRP ரேட்டிங்!
ஆனால் அப்படி எதுவும் இல்லை என்ற உண்மையை மின்னல் சொல்கிறார். வீட்டிற்கு வந்த மின்னல் சரஸ்வதிக்கு பருப்பு உருண்டை குழம்பு மிகவும் பிடிக்கும் என சொல்ல, அதை கேட்டு சரஸ்வதியின் தங்கை வருத்தப்படுகிறார். பின் மின்னல் கோதையின் மனம் இன்னும் மாறவில்லை என சொல்லி இருக்கிறார். சரஸ்வதி தமிழை இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை என சொல்ல அதை கேட்டு பாட்டி கோவமாக இருக்கிறார். பின் நான் என்ன என்று கேட்கிறேன் என சொல்லி கிளம்புகிறார்.
அப்போது கோதையை ரோடில் பார்த்த பாட்டி கோதை என அழைக்கிறார். அப்போது கோதை என்ன என கேட்க, நீ செய்வது உனக்கே நன்றாக இருக்கிறதா என கேட்கிறார். அப்போது என் குடும்பத்தை பற்றி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை என அவமானப்படுத்தி பேசுகிறார். பாட்டி எதுவும் பேசாமல் திரும்பி வருகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் சரஸ்வதி தேர்வில் வெற்றி பெற்றால் சீரியலில் பல மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.