உண்மையை சொல்லி திருமணம் செய்ய போராடும் தமிழ், சரஸ்வதி – அடுத்த வார எபிசோட்!
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் பல குழப்பங்களுக்கு மத்தியில் தமிழ் சரஸ்வதி திருமண பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. கோதைக்கு சரஸ்வதி படிப்பு குறித்த உண்மை தெரிந்தால் என்ன நடக்கும் என்பதே அடுத்து வரும் திருப்பமாக இருக்க போகிறது.
தமிழும் சரஸ்வதியும்:
“தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் பல திருப்பங்களுடன் கதை சென்று கொண்டிருக்கிறது. தமிழ் சரஸ்வதி அப்பாவிடம் சரஸ்வதி படிக்கவில்லை என்பதை சொல்ல வேண்டாம் என சொல்ல, அவரும் சம்மதிக்கிறார். பின் கோதை தனது குடும்பத்துடன் பெண் கேட்டு வருகிறார். அவருடன் சந்திரகலாவும் வருகிறார். அனைவரும் எதிர்பார்த்தது போல தமிழ் சரஸ்வதி திருமணம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஆனால் கோதை, தமிழ் மீது வெறுப்பாக இருக்கும் சந்திரகலா இந்த திருமணத்தை எப்படியாவது தடுக்க வேண்டும் என நினைக்கிறார்.
‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் இருந்து நடிகர் செந்தில் விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி!
அதற்காக சரஸ்வதி அப்பாவிடம் உங்க பொண்ணுக்கு எவ்வளவு நகை போடுவீர்கள், உங்களால் எவ்வளவு முடியும் என்று கிண்டலாக கேட்டு அவரை சங்கடப்படுத்துகிறார். அவர் இப்படி பேசினால் வரதட்சணை கேட்கிறார்கள் என சொல்லி திருமணத்தை நிறுத்தலாம் என சந்திரகலா திட்டமிடுகிறார். இப்படி விறுவிறுப்புடன் ஒவ்வொரு காட்சியும் சென்று கொண்டிருக்க சரஸ்வதி படிப்பு குறித்து கோதையிடம் சொல்ல வேண்டும் என தமிழ், சரஸ்வதி சேர்ந்து முயற்சி செய்கின்றனர்.
“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து விலகிய பின் ரோஷினி வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் வாழ்த்து!
காரணம் சரஸ்வதி படிப்பு பற்றி உண்மையை தெரிந்து தான் திருமணம் செய்ய வேண்டும் என சரஸ்வதி அப்பா சொல்ல, சரஸ்வதி எம்பிஏ படிக்கவில்லை பத்தாம் வகுப்பு தான் படித்திருக்கிறார் என தெரிந்தால் கோதை நிலை என்ன ஆகும். அவர் சரஸ்வதியை மருமகளாக ஏற்றுக் கொள்வாரா என்பதே அடுத்த வாரம் வரும் எபிசோடுகளில் பார்க்கலாம். பல சுவாரசியங்கள் கதையில் இருப்பதால் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.