சந்திரலேகா புடவையில் காபி கொட்டிய சரஸ்வதி, கோவத்தின் உச்சியில் லேகா – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” எபிசோட்!
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், பாட்டிக்கு உடம்பு சரியில்லை என ஏமாத்தி அருளை வர சொல்கிறார். பின் சரஸ்வதி சந்திரலேகா மீது காபியை கொட்டி விடுகிறார்.
தமிழும் சரஸ்வதியும்:
இன்று “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், தமிழும் சரஸ்வதியும் பேசிக் கொண்டிருக்க அருள் குறுக்கே வருகிறார். உடனே தமிழ் சென்று ஒளிந்து கொள்ள பாட்டி போன் செய்கிறார். அவர் ரொம்ப உடம்பு சரி இல்லை உடனே வா என பேச, அருள் பதறி போய் கிளம்பி செல்கிறார். பின் சரஸ்வதியும் தமிழும் எந்த தொந்தரவவும் இல்லாமல் இருக்கின்றனர். அந்த நேரம் பார்த்து காபி கொடுக்கிறார் தமிழின் நண்பர். மறுபக்கம் சந்திரலேகா நிச்சயத்திற்கு 1 லட்சம் மதிப்புள்ள புடவை அணிந்திருக்கிறார்.
அப்பாவான விஜய் டிவி பிரபலம் – வாழ்த்து மழையில் நனையும் ஜோடி!
அதை பார்த்து அனைவரும் பாராட்டுகின்றனர். உடனே சந்திரலேகா சந்தோசமாக இருக்க, சரஸ்வதியை அலுவலகத்தில் வேலை செய்பவரிடம் அறிமுகம் செய்து வைக்கின்றனர். அப்போது சரஸ்வதி கையில் வைத்திருந்த காபியை கீழே கொட்டி விட அது சந்திரலேகா மேலே சிந்துகிறது. உடனே சந்திரலேகா புடவை வீணாகி விட்டது என சத்தம் போட கோதை வந்து சமாதானம் செய்கிறார். சரஸ்வதி கண்ணீருடன் மன்னிப்பு கேட்க சந்திரலேகா மீண்டும் திட்டுகிறார்.
பின் கோதை அவள் தான் மனம் வருந்தி மன்னிப்பு கேட்கிறாள். அவளை மன்னிப்பது தான் பெரிய ஆளுங்க எண்ணம் என சொல்ல, சந்திரலேகா அமைதியாக கிளம்புகிறார். உடனே இது தான் தமிழுக்கு பார்த்த பெண் என ஏத்தி விட இந்த திருமணம் முடிவதற்குள் இவளை வீட்டை விட்டு அனுப்புகிறேன் என சந்திரலேகா சொல்கிறார். மாப்பிள்ளைக்கு பிடித்த கோட்டை அவர் அணிந்திருக்க சந்திரலேகா அது நன்றாக இல்லை என சொல்லி வேறு ஒரு கோட்டை கொடுக்கிறார்.
அது பிடிக்காமல் மாப்பிள்ளை இருக்க, இது வசு போட வேண்டும் ஆசைப்பட்டால் என சொன்னதால் கார்த்திக் மாற்றிக் கொள்கிறார். அதே போல வசுவிடம் குடும்ப நகை போட வேண்டும் என சொல்ல, சரஸ்வதி நன்றாக இல்லை என சொல்லி வேறு நகை மாற்றி விடுகிறார். அதை பார்த்து வசு சந்தோசமாக இருக்க லேகா வந்து பரம்பரை நகையை போட சொல்கிறார். உடனே சரஸ்வதி தான் இந்த ஐடியா கொடுத்தார் என சொல்ல, ஆதி வந்து இப்போது தான் ரொம்ப அழகாக இருக்கிறாய் என சொல்லி பாராட்டுகிறார். உடனே சந்திரலேகா கோபமாக வெளியே செல்கிறார்.
சரஸ்வதி புடவையில் வந்து நிற்க கோதை அவரை பார்த்து லட்சுமி போல இருப்பதாக சொல்கிறார். அவரது தோழிக்கும் உடை அழகாக இருப்பதாக சொல்கிறார். அதை கேட்டு சரஸ்வதி சந்தோசமாக இருக்க, தமிழ் வந்து நிற்க செம அழகாக இருப்பதை பார்த்து சரஸ்வதி சந்தோஷத்தில் இருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.