கோவிலில் கடவுளிடம் புலம்பும் தமிழ், மறைந்திருந்து வரம் கொடுக்கும் சரஸ்வதி – இன்றைய எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று சரஸ்வதியை தமிழ் தவறாக புரிந்து கொள்கிறார். தமிழ் கடவுளிடம் வேண்டுவதை வைத்து சரஸ்வதி அவரை கிண்டல் செய்கிறார்.
“தமிழும் சரஸ்வதியும்” சீரியல்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று சரஸ்வதி தன்னை பாலோவ் செய்தவரை நன்றாக திட்டி அனுப்பி விடுகிறார். அவரும் விட்டால் போதும் என்று ஓடி விடுகிறார். இதனை தூரத்தில் இருந்து பார்த்து விட்டு தமிழ் தவறாக புரிந்து கொள்கிறார். சரஸ்வதியை பாலோவ் செய்தவரை பிடித்து சரஸ்வதியை திருமணம் செய்து கொள்ளும்படி தமிழ் அறிவுறுத்துகிறார். அவர் தமிழை திட்டி விட்டு சென்று விடுகிறார். பின், தமிழ் சரஸ்வதியை பின்தொடர்ந்து சென்று பாலோவ் செய்தவர் குறித்து கேட்கிறார். சரஸ்வதி தமிழை நன்றாக திட்டி விட்டு அனுப்பி விடுகிறார். பின், தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் ஒரே கோவிலுக்கு செல்கின்றனர்.
கண்ணம்மா வீட்டில் ஹேமாவுடன் தங்கும் பாரதி – சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட்!
அங்கு தமிழ் தனது மனகுமுறலை சாமியிடம் தெரிவிக்கிறார். இதனை மறைந்து நின்று சரஸ்வதி மற்றும் அவரது தோழி இருவரும் கேட்கின்றனர். ஆரம்பத்தில் இருவரும் விளையாட்டு தனமாக கேட்கின்றனர். பின், தமிழ் கண்ணீர் விட்டு தான் மதுவை விரும்பியது, பின் மது தன்னை வேண்டாம் என்று கூறியது. தனது அம்மா சபதம் விட்டது என்று அனைத்தையும் கூறுகிறார். இதனை கேட்கும் சரஸ்வதிக்கு தமிழை நினைத்து பாவமாக இருக்கிறது. இதனால் சாமி போல் தமிழிடம் பேசுகிறார். முதலில், இதனை நம்ப மறுக்கும் தமிழ் பின் நம்பி விடுகிறார்.
TN Job “FB Group” Join Now
சரஸ்வதி தமிழின் மனதிற்கு பிடித்த மனைவி கண்டிப்பாக இன்னும் சில நாட்களில் கிடைத்து விடுவாள் என்றும், அவளை 3 முறை தொடர்ச்சியாக தமிழ் சந்திக்க இருப்பதாகவும், அவளை மூன்றாவதாக சந்திக்கும் போது மழை பெய்யும் என்றும் கூறுகிறார். அந்த பெண் தான் தமிழின் வருங்கால மனைவி என்றும் கூறுகிறார். இதனை முழுமையாக நம்பி விடும் தமிழ் மிகவும் சந்தோசமாக கோவிலில் இருந்து செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.