முதன்முதலாக சரஸ்வதியை சந்திக்கும் தமிழ், காதல் வலையில் விழுந்தாரா? இன்றைய எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று மது கூறியதை கேட்டு தமிழ் தன்னையே தனிமைப்படுத்தி கொள்கிறார். சரஸ்வதியை முதன் முறையாக பார்க்கும் தமிழுக்கு அவர் மேல் காதல் வந்து விடுகிறது.
“தமிழும் சரஸ்வதியும்” சீரியல்:
இன்று “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று தமிழ் மது கூறியதை கேட்டு வீட்டிற்கு செல்லாமல் இருக்கிறார். இதனால் அவரை பற்றி வருத்தப்படும் அவரது அம்மா கோதை அவரை கம்பெனியில் வந்து சந்திக்கிறார். தமிழ் தனது அம்மாவிடமும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். பின், கோதை மது பேசியதை நினைத்து கொந்தளிக்கிறார். இதனால் கோபம் அடையும் தமிழ் இதற்கு தான் வீட்டிற்கு வரவில்லை என்று கூறுகிறார். பின், கோதை அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வருகிறார். ஆனால், வீட்டிற்கு வந்தும் தமிழ் மிகவும் அமைதியாக இருக்கிறார். இதனால் குடும்பத்தினர் வருத்தம் அடைகின்றனர்.
தமிழகத்தில் ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிகள் திறப்பு? தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை!
தமிழுக்கு பெண் பார்க்கும் படலமும் வீட்டில் நடைபெறுகிறது. இதனால் தமிழ் அதிர்ச்சி அடைந்து விடுகிறார். பெண் பார்ப்பதை வேண்டாம் என்றும் அவரால் சொல்ல முடியவில்லை. தனது குடும்பத்திற்காக சரி என்று கூறி விடுகிறார். இங்கு சரஸ்வதி வீட்டில் சரஸ்வதி படித்து முடித்தால் தான் சாப்பாடு தர வேண்டும் என்று அவரது அப்பா கூறி விட்டு சென்று விடுகின்றனர். சரஸ்வதியை சாப்பிட சொல்லி அவரது பாட்டி கெஞ்சுகிறார்.
TN Job “FB Group” Join Now
ஆனால், சரஸ்வதி மறுத்து விட்டு தான் தனது தோழியுடன் கோவில் செல்ல இருப்பதாக கூறுகிறார். பின், தனது தோழியுடன் கோவில் செல்லும் போது சரஸ்வதியை பாலோ செய்து ஒருவர் வருகிறார். அவரிடம் செல்லும் சரஸ்வதி காதலிக்கிறாயா என்று கேட்கிறார். அதற்கு ஆமாம் என்று அவர் கூறியதும் கோவில் சென்று இப்போதே திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறுகிறார். இதனால் அந்த நபர் அதிர்ச்சி அடைகிறார். பின், அவருக்கும் சரஸ்வதிக்கும் சண்டை நடக்கிறது. இதனை தூரத்தில் இருந்து வண்டியில் செல்லும் தமிழ் பார்க்கிறார். முதல் பார்வையிலேயே தமிழுக்கு சரஸ்வதி மேல் காதல் வந்து விடுகிறது. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.