நாளை மற்றும் நாளை மறுநாள் சதுரகிரிக்கு செல்ல தடை – வனத்துறை அறிவிப்பு!!
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் புகழ்பெற்ற சிவாலயமான சதுரகிரி கோவிலுக்கு தை மாத பிரதோஷம், பெளர்ணமியை முன்னிட்டு நாளை முதல் 6ம் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக வனத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
சதுரகிரி
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் புகழ்பெற்ற சிவாலயமான சதுரகிரி கோவிலுக்கு பொதுவாக அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதன்படி அமாவாசைக்கு 4 நாட்களுக்கும், பவுர்ணமிக்கு 4 நாட்களுக்கும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் ஆனால் மழை காலங்களில் நீரோடைகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதால் வனத்துறையினர் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிப்பதில்லை.
தமிழகத்தில் குவாரிகள் அமைப்பது குறித்த வழக்கு – நீதிமன்றம் உத்தரவு!!
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் தற்போது, தைப்பூசம் திருநாளை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தை மாத பிரதோஷம், பெளர்ணமியை முன்னிட்டு பிப்ரவரி 3 முதல் 6ம் தேதி வரை பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறிச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை (பிப்ரவரி 3) மற்றும் நாளை மறுநாள் (பிப்ரவரி 4) பக்தர்கள் மலையேறி செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அத்துடன் மலை அடிவாரத்திற்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.