தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – தயார் நிலையில் பாடப்புத்தகங்கள்!
தமிழகத்தில் வருகிற ஜூன் 13 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தொடர்ச்சியாக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தமிழக அரசு அதற்கான முன்னேற்பாடுகளாக மாணவர்கள் முதல் நாளிலே அவர்களுக்கான நோட்டு,புத்தகங்களை பெற்று கொள்ளும் படி புது முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா வைரஸ் தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டு காலமாகிய 2020 மற்றும் 2021ல் இதுவரை காணாத உயிர்சேதத்தையும், பொருளாதார சேதத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் இந்த ஆண்டு வைரஸ் தாக்கம் குறைந்து எல்லா நிலைமையும் பழைய படி மாறி வரத் தொடங்கிய சமயம் பள்ளிகள் அனைத்தும் செயல்பட்டு நல் முறையில் கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் நிலைமை மாறிவிடும் போல் தெரிகிறது. ஏனெனில் மறுபடியும் கொரோனா வைரஸ் அதிகளவு பரவி ஒரு நாள் பலி எண்ணிக்கை 8ஐ தொட்டு உள்ளது.
PF பேலன்ஸை வீட்டில் இருந்த படியே அறிந்து கொள்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இதனால் குழந்தைகளின் பெற்றோர்களும் பள்ளிகள் வருகிற ஜூன் 13 அன்றே முன்னதாக அறிவித்த படி திறக்கப்படுமா? என கேள்வி எழுப்பியதற்கு கல்வி துறை அமைச்சர் சொன்னதில் மாற்று கருத்துக்கள் இல்லை என செய்தியாளர்களிடம் பதிலளித்திருந்தார். மேலும், குழந்தைகளின் நலனுக்காக தமிழக அரசு பல முன்னேற்பாடுகளை கொண்டு வர நினைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது. அதில் முதலாவதாக பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாகவே நோட்டு, புத்தகங்கள் கொடுக்கும் பணியை தொடங்கியுள்ளனர்.
Exams Daily Mobile App Download
அதாவது நேற்றைய தினம் அதிக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் இருக்கும் இடமான குமரியில் நோட்டு புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியது. இதை தொடர்ந்து அனைத்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான புத்தகத்தை அனுப்பி வைத்தனர். ஏனெனில் மாணவர்களுக்கு முதல் நாளே அவர்கள் கைகளுக்கு புத்தகங்கள் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த புது முயற்சியை அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து ஏதேனும் மாற்றங்கள் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.