TET தேர்வு முதல் தாள் தேர்வு தேதி மாற்றம்? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான டெட் முதல் தாள் தேர்வு செப்டம்பர் 10 முதல் 15-ம் தேதி வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் இது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ஆசிரியர் தகுதி தேர்வு:
இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு போட்டி தேர்வும் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது தொற்று பாதிப்புகள் குறையத் தொடங்கியதால் தமிழகத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தின் தேர்வுக்கு மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தது. தற்போதைய நிலவரப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் TET தேர்வுக்கு இன்னும் அதிகாரப்பூர்வ தேதியை வெளியிடவில்லை.
Exams Daily Mobile App Download
இதனால் தேர்வு தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி 1 முதல் 8 வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற டெட் தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். இந்த தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் ஹால் டிக்கெட் உள்ளிட்ட விவரங்கள் ஆகஸ்ட் 2 வது வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஒரே நாளில் 16,299 பேருக்கு கொரோனா உறுதி – சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்
TET எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வின் முதல் தாள் ஆகஸ்ட் 25 முதல் 31 வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தற்போது நிர்வாக காரணங்களால் டெட் தேர்வு முதல் தாள் செப் 10 முதல் செப் 15 ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. மேலும் தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னர் இந்த தேர்வுக்கான பயிற்சியை டிஆர்பி இணைய தளத்தில் தேர்வர்கள் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என்று தேர்வு வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.