TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – TET தேர்வர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் TET தேர்வு நடைபெற உள்ள நிலையில் இத்தேர்வுக்கு B.ED இறுதியாண்டு மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு (D.TED) இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு:
தமிழகத்தில் 2022ம் ஆண்டு தொடங்கியது முதல் அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது 5831 காலிப்பணியிடங்களை கொண்டுள்ள குரூப் 2,2A தேர்வு மே 21ம் தேதி நடைபெறும் என்று TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து அதிக தேர்வர்கள் எதிர்பார்க்க கூடிய குரூப் 4&VAO தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தேர்வுகளை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
ATM கார்டு இல்லாமல் பணம் எடுப்பது எப்படி? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு! முழு விபரம் இதோ!
இத்தேர்வுக்கு கடந்த மாதம் 13ம் தேதி முதல் விண்ணப்பபதிவுகள் தொடங்கியது. B.ED பட்டப்படிப்பு முடித்தவர்கள் இரண்டாம் தாள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு முடித்தவர்கள் முதல் தாள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. B.ED முடித்த பட்டதாரிகள் இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதனால் இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் B.ED, D.TED இறுதியாண்டு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாமா என்ற கேள்வி எழுந்தது.
இதற்கு பதிலளித்த தேர்வு வாரியம் மேல்நிலைக் கல்வி முடித்து இறுதியாண்டு ஆசிரியர் கல்வி பட்டயப் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் Bonafide Certificate- னை அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பிக்க ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பி.எட் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் Bonafide Certificate- னை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது.