CBSE 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பருவத்தேர்வு முடிவுகள் வெளியீடு!
இந்தியாவில் CBSE 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற சிபிஎஸ்இ முதல் பருவத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
CBSE தேர்வு:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது. மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மதிப்பீட்டு முறையில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. அதனை அடிப்படையாக வைத்து அடுத்த வகுப்பிற்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது. இந்த நிலையில் 2021 -2022ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றதால் 10,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த CBSE திட்டமிட்டது.
தமிழகத்தில் பேருந்துகள் நிறுத்தம், மீண்டும் இ-பாஸ் நடைமுறை! ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்?
புதிய மாற்றமாக நடப்பு கல்வி ஆண்டில் ஆண்டு பொதுத்தேர்வுக்கு பதில் இரண்டு பருவத் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி குறைக்கப்பட்ட பாடத்திட்ட அடிப்படையில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் அப்ஜெக்டிவ் என்ற கொள்குறி வகையில் பருவத்தேர்வு நடைபெற்றது. மேலும் தேர்வில் தவறாக பதில் அளித்தால் அவற்றைத் திருத்திக்கொள்ள வாய்ப்பும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த பருவத்தேர்வு முடிவுகள் 2022 ஜனவரி இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும் என்று CBSE கல்வி வாரியம் தெரிவித்தது. அதன்படி ஜனவரி 15ம் தேதிக்குள் CBSE 10, 12ம் வகுப்பு பருவத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்ற தகவல் வந்துள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா் வேலை – ஜன.27 கடைசி நாள்!
cbse.gov.in, cbseresults.nic.in என்ற இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மேலும் டிஜிலாக்கர் எனப்படும் ஆப் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாம் பருவத் தேர்வானது 2022 ம் ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும். இரண்டாம் பருவத்தேர்வு முடிந்த பிறகு இரண்டு தேர்வு முடிவுகளும் சேர்த்து அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.