TNPSC Group 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசுத்துறைகளில் 5529 காலியிடங்களை நிரப்பும் வகையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் குரூப் 2, குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வு 2 தினங்களுக்கு (சனிக்கிழமை) முன்பு நடைபெற்றது. இந்நிலையில் குரூப் 2 தேர்வு குறித்து முக்கிய தகவலை என்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்வு இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சாா்-பதிவாளா் உள்ளிட்ட 116 நோ்முகத் தோ்வு அடங்கிய காலிப்பணியிடங்களுக்கும், நகராட்சி ஆணையா், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலா் உள்பட 5,413 நோ்முகத் தோ்வு இல்லாத பணியிடங்களுக்கும் நடந்தது. குரூப் 2 தோ்வை எழுத விண்ணப்பித்தவா்களில் தமிழகம் முழுவதும் 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 போ் தகுதி பெற்றிருந்தனா். இந்நிலையில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 1.5 லட்சத்துக்கும் கூடுதலான தோ்வா்கள் விண்ணப்பித்திருந்தனா். ஆனால் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 285 போ் தோ்வை எழுத வரவில்லை. இதன்படி, 9 லட்சத்து 94 ஆயிரத்து 890 போ் தோ்வு எழுதினா்.
தமிழகம் முழுவதும் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறப்பு – கல்வித்துறையின் முடிவு என்ன?
கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக TNPSC போட்டித் தேர்வுகள் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தோ்வா்கள் அனைவரும் காலை 9 மணிக்குள்ளாக தோ்வு கூடங்களுக்கு வந்தனா். காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை தோ்வு நடந்தது. இத்தோ்வுக்காக 38 மாவட்டங்களில் 117 மையங்கள் தயாா் செய்யப்பட்டிருந்தன. குரூப் 2 முதல்நிலைத் தோ்வு முடிவுகள், ஜூன் மாத இறுதியில் வெளியிட அரசுப் பணியாளா் தோ்வாணையம் திட்டமிட்டுள்ளது. செப்டம்பரில் முதன்மைத் தோ்வை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் முதல்நிலைத் தோ்வில் வெற்றி பெறுவோரிலிருந்து ஒரு பதவியிடத்துக்கு 10 போ் வீதம் முதன்மைத் தோ்வு எழுத அனுமதிக்கப்படுவா். இந்நிலையில் குரூப் 2, 2ஏ தேர்வு குறித்து TNPSC தரப்பில் கூறியது, தமிழகத்தில் குரூப் 2, 2ஏ தேர்வில் தவறான கேள்விகள் ஏதும் இடம்பெறவில்லை. மேலும் குரூப் 2, 2ஏ தேர்வின் கேள்வி, மொழிபெயர்ப்பு, விடை தேர்வுகளில் எந்த தவறும் கிடையாது. தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு தேர்வாணைய இணையதளத்தில் 5 நாட்களுக்குள் வெளியிடப்படும். எனவே விடைக்குறிப்பு மீது தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை ஒரு வாரத்திற்குள் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.