தமிழகத்தில் தொடரும் பதற்றம் – குவிக்கப்பட்டுள்ள போலீஸ் படையினர்!
கோவை மாவட்டத்தில் நடந்துள்ள பெட்ரோல் குண்டு வெடிப்பு சம்பவத்தின் காரணமாக அங்கு மிகுந்த பதற்ற நிலை நீடிக்கிறது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் பாதுகாப்பு:
தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் சித்தாபுதூரில் உள்ள மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக சிலர் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர். இது மட்டுமல்லால் கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய இந்து முன்னணி மற்றும் பாஜக கட்சியினரின் வீடுகள் மற்றும் கடைகளிலும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இதைத்தவிர பொள்ளாச்சி, ஈரோடு மற்றும் குனியமுத்தூரிலும் இது போன்ற பெட்ரோல் குண்டுகள் வீசியுள்ள சம்பவங்கள் நடந்துள்ளது.
தமிழக அரசு ஓய்வூதியதார்ரகளுக்கு ஜாக்பாட் – அகவிலைப்படி உயர்வு! உயர்நீதிமன்றம் உத்தரவு!
இதனால் கோவை மாவட்டம் முழுவதும் மிகுந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளில் இதனால் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது. அதிவிரைவு மற்றும் 1,500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழக காவல்துறையின் உயரதிகாரிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, முன்னதாக ஜமாத் தலைவர்களுடன் ஆலோசனை நடந்து முடிந்துள்ள நிலையில், இன்றி மாலை இந்து அமைப்புகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும், நகரில் பதற்றத்தை ஏற்படுத்திய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், அதிக அளவிலான காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்