தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – இன்றே கடைசி நாள்!

0
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - இன்றே கடைசி நாள்!
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - இன்றே கடைசி நாள்!
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – இன்றே கடைசி நாள்!

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்தோர் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதோர் இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை இரவு 8 மணிக்குள் கல்வித்துறை ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தற்காலிக ஆசிரியர் காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இந்நிலையில் 13,391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு சில நாட்களுக்கு முன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என்று 3 வகையான ஆசிரியர்களை நியமனம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆதார் கார்டு செல்லாமல் போக வாய்ப்பு? தெரிந்து கொள்வது எப்படி! முழு விவரங்கள் இதோ!

பின்னர் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக திருத்திய வழிகாட்டு முறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. பள்ளிக்கல்வித்துறை வரையறுத்துள்ள கல்வித்தகுதிகள் அடிப்படையில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி வரை காலியாக உள்ள பணியிடங்களை மட்டுமே நிரப்ப வேண்டும். மேலும் இடைநிலை ஆசிரியா் பணிக்கு ‘டெட்’ முதல்தாள் தோ்விலும், பட்டதாரி ஆசிரியருக்கு ‘டெட்’ 2-ஆம் தாள் தோ்விலும் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை ஆசிரியா் பணிக்கு முதுநிலை பட்டயப்படிப்புடன் பி.எட் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

மேலும் ஒரு பணியிடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தால் முன்னுரிமை படி பரிசீலிக்க வேண்டும். அதாவது இடைநிலை, பட்டதாரி பணிக்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ‘டெட்’ தோ்விலும் தோ்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னாா்வலா்களாக பணிபுரிந்துவருபவா்கள் அல்லது ‘டெட்’ தோ்ச்சி பெற்றவா்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் பணி திருப்தி இல்லை என்றால் உடனே பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை 4ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே தற்காலிக ஆசிரியர் பணியில் சேர தகுதி வாய்ந்தோர் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!