தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் – சிக்கலில் கல்வித்துறை!
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அதற்கு வெறும் 2200 பேர் மட்டுமே சேர்ந்து இருக்கும் நிலையில் கல்வித்துறை பெரும் சிக்கலில் இருக்கிறது.
தற்காலிக ஆசிரியர் நியமனம்:
தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் என பல இடங்கள் காலியாக இருக்கும் நிலையில் முதற்கட்டமாக 13,391 ஆசிரியர்களை தற்காலிகமாக நியமனம் செய்ய இருப்பதாக அரசு முடிவு செய்தது. காலி பணியிடங்கள் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதன் படி இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ. 7500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ. 10000, முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ. 12000 என்ற அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கும், ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள், ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 13000 பணியிடங்களில் இதுவரை 2200 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ATM ல் பணம் எடுக்க புதிய வழிமுறை அறிமுகம்!
அதனால் கல்வித்துறை மிகுந்த சிக்கலில் இருக்கிறது. சம்பளம் குறைவாக உள்ள நிலையில் தனியார் பள்ளிகளில் இதைவிட அதிக சம்பளம் கொடுப்பதால் யாரும் விண்ணப்பிக்க முன் வரவில்லை. அதனால் மாணவர் கல்வி கேள்வி குறியாக இருக்கிறது. மற்ற மாவட்டங்களை தவிர்த்து 24 மாவட்டங்களில் 11,825 காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில், அதில் முதுகலை ஆசிரியர்கள் 2069 பேர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 152 பேர் என மொத்தம் 2,221 பேர் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனால் என்ன செய்வது என தெரியாமல் கல்வித்துறை திணறி வருகிறது.
Tétla passpanneetu apram paesungada.onnum vaenaam 1st paper la pass pannipaarunga