தமிழகத்தில் தற்காலிக முறையில் ஆசிரியர்கள் நியமனம் நிறுத்தி வைப்பு? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஆசிரியர்களை தேர்வு செய்யும் செயல்முறை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் நியமனம்:
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சுமார் 13, 331 ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக நிரப்ப பள்ளிக் கல்வித் துறை சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அரசு துவக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை பள்ளிகள் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 13, 331 ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் ஓராண்டுக்குள் நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 7,500 ரூபாயும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 10,000 ரூபாயும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 12,000 ரூபாயும் என மிகக் குறைந்த ஊதியமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த அறிவிப்புக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. மேலும் இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மீண்டும் மீண்டும் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும். எனவே, தற்போது தற்காலிக முறையில் ஆசிரியர்களை நியமிப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
கிரெடிட் கார்டு முதல் வருமான வரி விதிகள் வரையிலான மாற்றங்கள் – நாளை முதல் அமல்!
இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்யக் கோரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா வழக்கு தொடர்ந்தார்.மேலும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், தமிழக அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது. எனவே தற்காலிக ஆசிரியர் நியமன முறையில் தகுதியற்ற, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை மாவட்ட கல்வி அலுவலர்கள் பணியில் அமர்த்த நேரிடும். எனவே, மனு குறித்து அரசு தரப்பில் விளக்கம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.