5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக தேர்ச்சி – மாநில அரசு அறிவிப்பு!

0
5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக தேர்ச்சி - மாநில அரசு அறிவிப்பு!
5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக தேர்ச்சி - மாநில அரசு அறிவிப்பு!
5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக தேர்ச்சி – மாநில அரசு அறிவிப்பு!

திரிபுரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் கொரோனா பரவல் காரணமாக 5, 8, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தற்காலிகமாக அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி அடைய வைக்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறக்கப்படாமல் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர மற்ற மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமல் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு 5% இட ஒதுக்கீடு – அரசுக்கு வலியுறுத்தல்!

இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்புகளில் இருந்து மாணவர்கள் தேர்வுகள் இல்லாமல் அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மாநில கல்வித்துறை தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 5, 8, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தற்காலிகமாக அடுத்த வகுப்புகளுக்கு ஊக்குவிக்கப்பட உள்ளதாகவும், நிலைமை சரிசெய்யப்பட்டதும் பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் மறு மதிப்பீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை, பிற உதவித்தொகை மற்றும் மதிப்பெண்கள் சம்பந்தப்பட்ட 9 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் தற்காலிகமாக அடுத்த வகுப்பிற்கு தரம் உயர்த்தப்படுவார்கள். ஆனால் அதன் பின்னர் அவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதில் 33 மதிப்பெண்ணுக்கு மேல் மதிப்பெண் பெறாத மாணவர்களுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் தகுதி மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

திரிபுராவில் ஐந்தாம் வகுப்பில் 51,827 மாணவர்களும், 8 ஆம் வகுப்பில் 52,659 மாணவர்களும், 9 ஆம் வகுப்பில் 53,176 மாணவர்களும், 11 ஆம் வகுப்பில் 30,082 மாணவர்களும் உள்ளனர். 1,2,3,4,6 மற்றும் 7 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களை அவர்களின் அடுத்த வகுப்புகளுக்கு தேர்வுகள் இல்லாமல் ஊக்குவிக்க உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!