Mobile pe செயலியின் பண பரிவர்த்தனைக்கு இடைக்கால தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு!
போன் பே நிறுவனம் தங்களது வர்த்தக சின்னம் போல மொபைல் பே நிறுவன சின்னம் உள்ளதாக கூறி அதனை தடை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணையில் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
பண பரிமாற்ற செயலி:
இந்தியாவில் மக்கள் பண பரிமாற்றத்திற்கு அதிகமாக G PAY, PAYTM, PHONEPE உள்ளிட்ட மொபைல் செயலிகளையே பயன்படுத்துகின்றனர். இந்த செயலிகள் பயனர்களை கவரும் வகையில் அவ்வப்போது கேஸ்பேக் ஆபர்களையும் அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் நேரடி பண பரிமாற்றத்தையே தவிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் பண பரிமாற்ற செயலியான போன் பே தங்கள் நிறுவனத்தின் வர்த்தக சின்னத்தை போல மொபைல் பே உள்ளதால் அதனை தடை செய்ய கோரி வழக்கு தொடர்ந்தது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி இரண்டு நிறுவன செயலிகளின் லோகோவும் ஒரே மாதிரியாக இல்லை. ஆனால் சாதாரண மக்கள் பார்வையில் அவை ஒரே மாதிரியான தோற்றத்தில் தான் காட்சியளிக்கும் என்று கூறி மொபைல் பே செயலி சேவைகளை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மேலும் மொபைல் பே செயலியில் பணம் சேர்ப்பது உள்ளிட்ட பிற நடவடிக்கைகளுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் காலியாக இருக்கும் மருத்துவ பணியிடங்கள் 2 மாதங்களில் நிரப்பப்படும் – அமைச்சர் பேட்டி!!
Exams Daily Mobile App Download
மேலும் போன் பே செயலி அளித்த மனுவில் பயனர்கள் பதிவிறக்கம் செய்யும் கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து மொபைல் பே செயலியை நீக்க கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கை குறித்து கூகுள், ஆப்பிள் நிறுவனங்கள் பதிலளிக்கும்படி நீதிமன்றம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்