நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்க இடைக்கால தடை – தேர்வு முகமை அறிவிப்பு!
நீட் தேர்வில் தவறான கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்த மாணவருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்க இடைக்கால தடை என தேர்வு முகமை அறிவித்துள்ளது.
கருணை மதிப்பெண்கள்
பொதுவாக போட்டித்தேர்வில் தவறாக கேள்வி கேட்கப்பட்டால் அக்கேள்விக்குரிய மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்களாக வழங்கப்படுவது வழக்கமாகும். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற நீட் தேர்விலும் கேள்வி ஒன்று தவறாக கேட்கப்பட்டிருந்தது. இக்கேள்விக்கு பதிலளித்தவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இந்த நிலையில் திண்டிவனத்தைச் சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் நீட் தேர்வு எழுதி இத்தேர்வில் 92 கட் ஆஃப் மதிப்பெண்களை பெற்றார்
Follow our Instagram for more Latest Updates
இவர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் 93 மதிப்பெண்கள் கட் ஆஃப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும் இவர் தவறான கேள்விக்கு விடையளிக்காமல் தவிர்த்துள்ளார். அதனால் இக்கேள்விக்கான கருணை மதிப்பெண் வழங்கக் கோரி மத்திய அரசுக்கும், தேர்வு முகமைக்கும் மனு அனுப்பினார். இந்த மனுவை ஏற்று கொள்ளாததால் சென்னை உயர் நிதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
Exams Daily Mobile App Download
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, பாதிக்கப்பட்ட மாணவருக்கு கருணை மதிப்பெண்களை வழங்க உத்தரவிட்டனர். இந்த நிலையில் தேர்வு முகமை இது தொடர்பாக கூறியிருப்பதாவது, கருணை மதிப்பெண்கள் வழங்க இடைக்கால தடை என தேர்வு முகமை அறிவித்துள்ளது. அத்துடன் தவறான கேள்வியை தவிர்க்காமல் ஏதாவது ஒரு விடையை அளித்திருந்தால் மட்டுமே கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.