தமிழகத்தில் மீண்டும் கோவில்கள் திறப்பு? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருக்கும் கோவில்கள் விரைவில் திறக்கப்படும் எனவும் மீண்டுமாக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.
கோவில்கள் திறப்பு
கொரோனா 2 ஆம் அலை காரணமாக தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கில் காய்கறி கடைகள், மதுக்கடைகள், தேநீர் கடைகள், சலூன் கடைகள் உள்ளிட்ட பல சேவைகள் மீண்டுமாக துவங்கியுள்ளது.
அக்டோபர் முதல் அடுத்த கல்வியாண்டு – செமஸ்டர் தேர்வுகள் குறித்து விரைவில் அறிவிப்பு!
இதன் படி வரும் நாட்களிலும் மாநிலம் முழுவதும் மேலும் சில தளர்வுகள் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமாக போக்குவரத்து மற்றும் மத வழிபாட்டு தலங்கள் மீண்டுமாக திறக்கும் அறிவிப்புக்காக பலர் எதிர்பார்த்துள்ளனர். அந்த வகையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மத வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு, கோவில்களில் நடைபெறும் சில முக்கிய திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 50 சதவீத அரசு பேருந்துகள் இயக்கம்? முதல்வர் ஆலோசனை!
இதனால் பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியுள்ளது. இந்த நிலையில் பக்தர்களின் வழிபாட்டுக்காக கோயில்கள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். மேலும் திருச்சி மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோவிலில், ரோப் கார் சேவைகளை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.