தமிழகத்தில் வெப்ப நிலை மேலும் அதிகரிக்கும் – பொதுமக்கள் கவனத்திற்கு! வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளது. நேற்று வரை தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் பொது மக்களும் கோடை மழை வருமா என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.
வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக நவம்பர் மாதத்தில் மழை பெய்து முடிந்துள்ள நிலையில் இப்போது கோடை காலம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் மே 4 ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கி உள்ளது. இந்த அக்னி நட்சத்திரமானது தமிழில் உள்ள நட்சத்திரங்களில் இருக்கும் பரணி மற்றும் கார்த்திகை ஆகிய நட்சத்திரங்கள் சூரியனுடன் சேர கூடிய நாட்கள் தான் அக்னி நட்சத்திரமாக வருகிறது. மேலும் இந்த நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த அக்னி நட்சத்திரம் ஆரம்பிப்பதற்கு முன்பே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள அசானி புயலால் ஒடிசா மற்றும் ஆந்திர கடல் பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயலின் நகர்வுக்கு ஏற்ப தமிழ்நாட்டில் தரைக்காற்று வீசும் திசையில் மாறுதல் ஏற்படும். தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.