தமிழகத்தின் 5 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டிய வெயில் – பொதுமக்கள் அவதி!
தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று ஒரு நாள் மட்டுமே 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியில் வாடி வருகின்றனர்.
தமிழ்நாட்டின் வெப்பநிலை:
தமிழகத்தை பொறுத்த வகையில் இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் வெயில் தலைவிரித்து ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் இந்த வெயிலானது, இந்தியாவில் 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு சென்ற மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியீட்டு உள்ளது. இதனால் மக்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே இருந்தால் நல்லது. மேலும் இந்த மாதம் தொடங்கி சில நாட்களே ஆன நிலையில் இன்று மட்டும் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் தாக்கி வருகிறது.
TN TRB தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு – இன்னும் 9 நாட்கள் மட்டுமே!
தமிழகத்தில் இந்த ஆண்டின் பிப்ரவரி மாத இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. மார்ச் மாதத்தில் பல இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் மற்றும் அதனை தாண்டி பதிவானது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று மட்டும் 5 பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று 5 பகுதிகளில் வெயிலின் அளவு 100 பாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது. ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், மதுரை நகரம், சேலம் ஆகிய 5 பகுதிகளில் வெயில் 100 பாரன்ஹீட் டிகிரியை கடந்துள்ளது. அதிபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 39.5 செல்சியஸ் (103.1 பாரன்ஹீட் டிகிரி ) வெயில் பதிவானது. அடுத்ததாக மதுரை விமான நிலையத்தில் 38.7 செல்சியஸ் (101.66 பாரன்ஹீட் டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. மதுரை நகரில் 38.6 செல்சியஸ் (101.48 பாரன்ஹீட் டிகிரி) ஈரோடு மற்றும் சேலத்தில் 38 செல்சியஸ் (100.4 பாரன்ஹீட் டிகிரி) பதிவாகி இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.