விஜய் டிவி பிரபல சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் – பிக்பாஸ் சீசன் 5 எதிரொலி!
விஜய் டிவியில் பிரமாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 5 வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்க உள்ளதால் பிரபல சீரியல்களில் நேர மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
விஜய் டிவி சீரியல்கள்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தினமும் இந்த சீரியல்களில் என்ன நடக்க இருக்கிறது என ப்ரோமோ வீடியோ வெளியாகும். அதற்காக காத்திருக்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர். இந்நிலையில் ஆண்டுதோறும் மிகவும் பிரம்மாண்டமான பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்படும். 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், பல பிரபலங்கள் ஒரே வீட்டில் தங்க வைக்கப்படுவார்கள்.
இன்னும் 7 நாட்கள், விஜய் டிவி ‘பிக்பாஸ் சீசன் 5’ போட்டியாளர்கள் விவரம் – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
கடந்த 4 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்கான ஐந்தாவது சீசன் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக ப்ரோமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் நிகழ்ச்சியை நடிகர் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் போட்டியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்காக பல ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கோபியை எதிர்த்து சமையல் ஆர்டரில் பெண்களுடன் களமிறங்கும் பாக்கியா – வெளியான ப்ரோமோ!
அதனால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நேர மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மணிக்கு ஒளிபரப்பான மௌன ராகம் 2 சீரியல் மாலை 7 மணிக்கும், 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் 6.30 மணிக்கும் ஒளிபரப்பாக இருக்கிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி பிஏ சீரியல் அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் முடிவடைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.