கொரோனா கட்டுப்பாடு செலவை பெற்றோர்களே ஏற்க வேண்டும்- தனியார் பள்ளிகள் அறிவிப்பு!!

0
கொரோனா கட்டுப்பாடு செலவை பெற்றோர்களே ஏற்கவேண்டும்- தனியார் பள்ளிகள் அறிவிப்பு!!
கொரோனா கட்டுப்பாடு செலவை பெற்றோர்களே ஏற்கவேண்டும்- தனியார் பள்ளிகள் அறிவிப்பு!!
கொரோனா கட்டுப்பாடு செலவை பெற்றோர்களே ஏற்கவேண்டும் – தனியார் பள்ளிகள் அறிவிப்பு!!

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிகள் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு திறக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் பள்ளிகளை திறக்க பள்ளிகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் சில தனியார் பள்ளிகள் தூய்மை பணிக்கு அதிகம் செலவாவதால் அந்த செலவை அரசே ஏற்க கோரிக்கை வைக்கின்றன.

தூய்மை பணிக்கான செலவு:

தெலுங்கானா மாநிலத்தில் பள்ளிகள் வருகிற பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளிகளில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து தெலங்கானா பள்ளி மேலாண்மை சங்கத்தின் தலைவர் ஒய்.சேகர் ராவ் கூறுகையில், “கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் பள்ளிகள் திறக்க தெலுங்கானா மாநில அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. நடப்பு கல்வியாண்டை ஜூலை மாதம் வரை நீடிக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

மேலும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விரைவில் திறக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் குறைந்தபட்சம் 120 நாட்கள் பள்ளியில் கல்வி கற்கலாம். இதற்கிடையில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் பள்ளி வளாகங்கள் தூய்மை செய்யும் பணிக்காக சில நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. ஏற்கனவே பள்ளிகள் திறக்காமல் பெரும் நிதி நெருக்கடியில் உள்ளனர். இந்நிலையில் கொரோனா தடுப்பு பராமரிப்பிற்காக நிதி ஒதுக்குவது பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.

தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு!!!

எனவே இந்த செலவை அரசே ஏற்க வேண்டும். இல்லையென்றால் மாணவர்களின் பெற்றோர்களிடம் கொரோனா பராமரிப்பு கட்டணம் வசூலிப்போம்” என்று அவர் தெரிவித்தார். ஏற்கனவே உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை, இன்று கல்வி அமைச்சர்களை சந்தித்து மீண்டும் கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!