அட்டகாசமான வசதிகளுடன் கூடிய…அரசு பள்ளிகள் பிப்.1 முதல் திறப்பு – அறிவிப்பை வெளியிட்ட தெலுங்கானா!!
‘Mana Ooru-Mana Badi’ என்ற திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகள் தெலுங்கானாவில் தரம் உயர்த்தப்பட உள்ளது. இதில் தற்போது முதற்கட்டமாக 1200 பள்ளிகளை தரம் உயர்த்தி உள்ளதாகவும், இதனை பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்க உள்ளதாகவும் அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அரசு பள்ளிகள்:
தெலுங்கானாவில் ‘Mana Ooru-Mana Badi’ என்ற திட்டத்தின் கீழ் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த உள்ளதாக அம்மாநில கல்வியமைச்சர் அறிவித்திருந்தார். இதில் முதற்கட்டமாக, சுமார் 9,123 அரசு பள்ளிகளுக்கு ரூ.3,497 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசு பள்ளிகளை நவீனமயமாக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
சென்னையில் பரவும் ப்ளூ காய்ச்சல் – அச்சத்தில் மக்கள்.. மருத்துவர்கள் விளக்கம்!!
Follow our Instagram for more Latest Updates
இதில் முதல்கட்டமாக ‘Mana Ooru-Mana Badi’ என்ற திட்டத்தின் கீழ் 1,200 அரசுப் பள்ளிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக இவர் தெரிவித்துள்ளதாவது, ‘Mana Ooru-Mana Badi’ என்ற திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில், குடிநீர் வசதியுடன் கூடிய கழிவறைகள், குடிநீர் வசதி, பள்ளிகளுக்கு வர்ணம் பூசுதல், பிற பழுதுபார்ப்பு, பச்சை சாக்போர்டுகள் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அரசு பள்ளிகளில் பாதுகாப்பு சுவர்கள், சமையலறை கொட்டகைகள், மாணவர்களுக்காக புதிய வகுப்பறைகள், டிஜிட்டல் முறையில் கல்வி வழங்குவதற்கான வசதிகள் உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. அத்துடன் மாற்றியமைக்கப்பட்ட 1,200 அரசுப் பள்ளிகளை வருகிற பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.