1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க வேண்டும் – ஆசிரியர்கள் கோரிக்கை!!
பள்ளிகள் திறப்பு:
கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் பிப்ரவரி 1ம் தேதி முதல் தான் தெலுங்கானா மாநிலத்தில் 9-12ம் வகுப்புகளான உயர் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு வெற்றிகரமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றது. இந்நிலையில் அடுத்த கட்டமாக 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை மீண்டும் திறந்து நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் மாநில தலைமை செயலாளர் அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் சுழற்சி முறையில் கல்லூரி வகுப்புகள் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
மாநில ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் கருத்து:
தெலுங்கானா மாநில ஐக்கிய ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் ஜங்கையா அவர்கள் செய்தியாளர்களிடம், “பிப்ரவரி 1ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள உயர்நிலை பள்ளிகள் சுமூகமாக இயங்கி வருகிறது. அண்டை மாநிலத்தில் கூட அனைத்து வகுப்புகளுக்கும் மீண்டும் பள்ளிகள் செயல்பட தொடங்கி விட்டது. நாங்களும் 1 முதல் 8ம் வகுப்புக்ளுக்கு மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கான நேரம் வந்து விட்டது. இதனால் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்கள் ஒரு சில மாதங்களாவது பள்ளிக்கு வரும் சூழல் உருவாகும்” என்று கூறினார்.
TN Job “FB Group” Join Now
ஊழியர்கள் அனைவர்க்கும் பரிசோதனை:
கடந்த ஜனவரி மாதம் கல்வி அமைச்சர் சபிதா அவர்களின் தலைமையில் தனியார் பள்ளிகள் மற்றும் பெற்றோர் நிர்வாகத்தினருக்கும் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தின் பிரதிநிதிகள் வகுப்புகள் மீண்டும் தொடங்குவதற்கு முன்னதாக பள்ளிகளில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் மற்றும் அனைவர்க்கும் கோவிட் -19 பரிசோதனை செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்