குடியரசு தினவிழா அணிவகுப்பு ரத்து – தெலுங்கானா அரசு அறிவிப்பு!!
தெலுங்கானா மாநில அரசாங்கம் இரண்டாவது முறையாக குடியரசு தின விழாவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு ராணுவ பாசறை வீரர்களின் அணிவகுப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினவிழா
நாடு முழுவதும் நாளை, ஜனவரி 26 ஆம் தேதியன்று 74 ஆவது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அல் சிசி கலந்து கொள்ள இருக்கிறார்.
தமிழக அறநிலையத்துறைக்கு பிறப்பிக்கப்பட்ட முக்கிய உத்தரவு – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!!
Follow our Twitter Page for More Latest News Updates
இதற்கிடையில், மாநிலங்களிடையே நடத்தப்படும் குடியரசு தின அணிவகுப்பை தெலுங்கானா மாநில அரசு ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கானா அரசு குடியரசு தின அணிவகுப்பை ரத்து செய்வது இது இரண்டாவது முறையாகும். மேலும், தெலுங்கானாவில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆளுநர் அணிவகுப்பு மரியாதையும் நடத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.