1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி – மாநில அரசு அறிவிப்பு!!
தெலுங்கானா மாநிலத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தெலுங்கானா அரசு:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து கல்வி வாரியங்களும் பள்ளிகளை மூடுவதற்கு உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு ஏப்ரல் 26ம் தேதி நிலவரப்படி ஒரு நாளில் 6,551 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக உள்ளது. இதன் மூலம் புதிதாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டியுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000 ஆகும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) – பயணப்படி உயர்வு கிடையாது!!
தெலுங்கானா மாநிலத்தில் மாணவர்களின் நலன் கருதி 5,21,392 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தள்ளிவைக்க மாநில கல்வித்துறை முடிவு செய்திருந்த நிலையில், ஜூன் முதல் வாரத்தில் 12ம் வகுப்பு தேர்வு தொடர்பான முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இல்லாமல் 12ம் வகுப்புக்கு தேர்வு பெற்ற நிலையில், கொரோனா பதற்றம் குறைந்த பின்னர் தேர்வுகள் நடப்படும்.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு புறநிலை அளவுகோல் படி மதிப்பெண்கள் வழங்கப்படும். அவற்றில் திருப்தி இல்லாத மாணவர்கள் பின்னர் நேரடி தேர்வுகளை எழுதிக் கொள்ளலாம். 1 முதல் 9ம் வகுப்பு வரை 53,79,388 மாணவர்கள் தேர்வில்லாமல் தேர்ச்சி செய்யப்பட்டுள்ளார்கள். மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 1ம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு பற்றி முடிவெடுக்கப்படும் என்று மாநில அமைச்சர் அறிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்