கூகுளின் தாய் நிறுவனத்திற்கே இப்படி ஒரு நிலைமையா? 10,000 பேர் பணி நீக்கம் – அவதியில் ஊழியர்கள்!!
உலகில் ஏற்படும் பொருளாதார மந்த நிலை காரணமாக முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடைமுறையில் இறங்கியுள்ளன. அந்த வகையில் தற்போது கூகுளின் பொறுப்பு நிறுவனமான Alphabet நிறுவனமும் ஊழியர்களின் பணி நீக்க செயல்முறையில் இறங்கியுள்ளது.
பணி நீக்கம்:
தற்போது அதிகரித்து வரும் பண வீக்கம் மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக பல முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களின் லாபத்தை அதிகப்படுத்தவும் வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளவும் பணி நீக்கம் மற்றும் பணி அமர்த்தலை நிறுத்துதல் ஆகிய செயல்முறைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதன் மூலமாக நிறுவனத்தில் அதிக லாபத்தை ஈடுவதுடன், வளர்ச்சியையும் தக்க வைக்க முடிகிறது. அந்த வகையில் Twitter, Microsoft, Amazon உள்ளிட்ட நிறுவனங்கள் பணி நீக்கம் செய்து வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இதே போல் தற்போது கூகுளின் பொறுப்பு நிறுவனமான Alphabet நிறுவனமும் ஊழியர்களின் பணிநீக்க செயல்முறையில் இறங்கியுள்ளது. இந்நிறுவனம் சுமார் 1,87,000 பணியாளர்களை கொண்டுள்ளது. இதில் தற்போது 6% ஊழியர்கள் அதாவது 10000 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
200 பள்ளிகளில் கால்பந்தை ஊக்குவிக்கும் புதிய திட்டம் – மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!!
Exams Daily Mobile App Download
மேலும் நிறுவனத்தில் குறைவாக செயல்திறன் கொண்ட ஊழியருக்கு அடுத்த வேலையை தேடி கொள்வதற்கு 60 நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள் எப்போது வேலை பறிபோகும் என்ற அச்சத்தில் உள்ளனர். மேலும் இது போன்று கூகுள் நிறுவனம் பணியமர்த்தலை நிறுத்தி வைத்துள்ளது. அத்துடன் ஏற்கனவே இருக்கும் பணியாளர்களின் திறனை மேம்படுத்த உள்ளதாகவும் அல்லது வெளியே அனுப்ப உள்ளதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.