தமிழகத்தில் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை – மாவட்ட ஆட்சியர் தகவல்!
தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் நிர்வாகப் பணிகளுக்காக பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை
கொரோனா 2 ஆம் அலை காரணமாக கடந்த 2 மாதங்களாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது நோய்பரவல் பாதிப்பானது வெகுவாக குறைந்து வந்ததை அடுத்து பள்ளிகளில் நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்காக பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. அதாவது பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை பணிகள், இலவச பாடப்புத்தகங்களை வழங்குவது, சுகாதர பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியிருந்தார்.
SMS மூலமாக ஆதார் சேவைகள் – UIDAI புதிய வசதி அறிமுகம்!!
இதற்கிடையில் கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளி மாணவர்களுக்கான புதிய கல்வியாண்டு துவங்கியுள்ளதால், ஆசிரியர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். தமிழகத்தில் தற்போது கொரோனா முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்துகள் இயக்கத்திற்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதனால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வந்து ஆன்லைன் வழியாக பாடங்களை நடத்த வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த அறிவிப்பை எதிர்த்த ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் முதன்மை கல்வி அலுவலர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட பின்னர், பள்ளிக்கல்வி ஆணையரின் அடுத்த உத்தரவு வரும் வரையிலும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பள்ளிக்கு வருகை தரலாம் என உத்தரவிட்டுள்ளார்.