ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி முகப்பு அடிப்படையில் பணி – தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை!!
தமிழகத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதித்தேர்வு தேர்ச்சி முகப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மேலும் ஓய்வூதிய திட்டத்தையும் பழைய முறையில் தொடர வேண்டும் எனவும் கோரி உள்ளனர்.
ஆசிரியர்கள் கோரிக்கை:
தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் 2 தாள்கள் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதில் முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையும், 2ம் தாளில் தேர்ச்சி பெற்றால் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது. இதற்கான தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடியாகும் நிலை இருந்தது.
ரேஷன் கடைகளுக்கான 2021ஆம் ஆண்டு விடுமுறை நாட்கள் – தமிழக அரசு அறிவிப்பு!!
இதனால் இதில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்கள் 7 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தேர்வெழுதி தங்களது தகுதியை நிரூபிக்க வேண்டிய நிலை இருந்ததால், ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்தது. இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு – பெரியார், பரியேறும் பெருமாள் & கொரோனா வைரஸ் பற்றிய வினாக்கள்!!
இந்நிலையில் இன்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் தகுதித்தேர்வு முகப்பு அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என கோரப்பட்டு உள்ளது. மேலும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து, புதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்