வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு பணியில் ஆசிரியர்கள் – பாடம் நடத்துவதில் சிக்கல்!
இந்தியாவில் முக்கிய ஆவணமாக விளங்கும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் ஆதார் – வாக்காளர் அட்டை இணைப்பு பணியில் ஆசிரியர்கள் இறங்கியுள்ளனர்.
ஆதார் – வாக்காளர் அட்டை:
இந்தியாவில் ஆதார் எண் அனைத்து வேலைகளுக்கும் அவசியமான ஆவணமாக மாறிவிட்டது. இந்த ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு எண், பான் கார்டு எண் ஆகியவற்றை இணைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி அனைவரும் ஆதாருடன் மேற்சொன்ன ஆவணங்களை இணைத்தனர். அந்த வரிசையில் தற்போது ஆதார் எண்ணுடன் இந்த வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இப்பணியானது நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது தேர்தல் ஆணைய அலுவலர்கள் மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் முகாம்கள் அமைத்து வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைந்து வருகின்றனர். மேலும் ஆன்லைன் வாயிலாகவும் மொபைல் ஆப் மூலமாகவும் இந்த வாக்காளர் – ஆதார் இணைப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் தொடக்கபள்ளி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி உதவியாளர்கள் ஆகியோர்கள் ஆதார் – வாக்காளர் அட்டை பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உஷார் மக்களே.. தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!
Exams Daily Mobile App Download
இவர்கள் வீடு வீடாக சென்று ஆதார் கருடா செயலி மூலமாக இணைப்பு செய்து வருகின்றனர். இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆசிரியருக்கும் குறைந்தது 800 முதல் 1500 பேருக்கு மேல் இணைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்த நேரத்தில் காலாண்டு தேர்வு நடைபெறவுள்ளது. அதனால் ஆசிரியர்கள் பாடகுறிப்பை தயாரிப்பதிலும், பள்ளிகளில் பாடம் நடத்துவதிலும் சிக்கல் எழுந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்