தமிழகத்தில் மே 20 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!

0
தமிழகத்தில் மே 20 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை - முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
தமிழகத்தில் மே 20 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை - முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!
தமிழகத்தில் மே 20 வரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை – முக்கிய உத்தரவு பிறப்பிப்பு!

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேற்றுடன் பள்ளி நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிக்காக மே 20 ஆம் தேதி வரைக்கும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என அறிவித்திருந்த நிலையில் அதற்குள் பணியை முடித்து விட்டால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளி ஆசிரியர்கள்:

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் பொதுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதியிலிருந்தும், 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதியிலிருந்தும், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 ஆம் தேதியிலிருந்தும் பொதுத் தேர்வு துவங்கியிருக்கிறது. மேலும், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேற்றுடன் பொதுத்தேர்வு நிறைவடைந்துவிட்டது. இதனால் மாணவர்களுக்கு இன்றிலிருந்து ஜூன் 12ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இருப்பினும் ஆசிரியர்கள் மே 20 ஆம் தேதி வரைக்கும் பள்ளிக்கு வரவேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. அதாவது மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி, மதிப்பெண் பட்டியலை தயார் செய்யும் பணி, ஒருங்கிணைந்த மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு தேர்ச்சி பட்டியல் பதிவேடு தயார் செய்யும் பணி போன்ற காரணத்திற்காக ஆசிரியர்கள் கண்டிப்பாக மே 20ஆம் தேதி வரைக்கும் பள்ளிக்கு வரவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மே 20-ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் தங்களுடைய பணியை முடித்து விட்டால் அதற்குப் பிறகு ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை எனவும் பள்ளி கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது. மேலும், வெளிநாடு செல்ல திட்டமிட்டிருக்கும் ஆசிரியர்கள் தங்களது பணிகளை விரைவில் முடித்து விட்டு வெளிநாடு செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TCS, HCL, Infosys நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – Work From Home ஹைப்ரிட் மாடல் திட்டங்கள்!

மே 20ஆம் தேதி வரைக்கும் காத்திருக்க தேவையில்லை தங்களுடைய பணியை முடித்து விட்டாலே ஆசிரியர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தாத காரணத்தினால் மாணவர்களுடைய எண்ணிக்கையையும், EMIS சில மாணவர்களுடன் எண்ணிக்கையும் ஒப்பிட்டு அதனையும் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அடுத்த கல்வி ஆண்டு எப்போது துவங்கும் என்பதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!