அரசு கல்லூரியில் இன்றும் நாளையும் ஆசிரியர், மாணவர்கள் வர தடை – கல்லூரி முதல்வர்!
அரசு கல்லூரியில் பணியாற்றும் பெண் பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இன்றும், நாளையும் கல்லூரிக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வர வேண்டாம் என கல்லூரி முதல்வர் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று:
கொரோனா தொற்று முதல் மற்றும் இரண்டாம் அலை பரவலை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்ததன் காரணமாக ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இருப்பினும் செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் டெல்டா வகை வைரஸ் பரவல் தீவிரம் – சுகாதாரத்துறை தகவல்!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள அரசு கல்லூரியில் பணியாற்றிய பெண் பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால் பணியாளருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேராசிரியர்கள், மாணவர்களின் சேர்க்கை குறித்த விவரங்களை உடனடியாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிவித்து, இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கள் கல்லூரிக்கு வந்து தெரிந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று அக்கல்லூரியின் முதல்வர் சுகுமார் கூறியுள்ளார்.