தமிழக தனியார் பள்ளியில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு இளநிலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் முடித்த ஆசிரியர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் மாவட்டந்தோறும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பல்வேறு பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளது. அவற்றினை நிரப்புவதற்கான அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்பிட தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பிக் கொள்ள அந்தந்த பள்ளிகளின் வாயிலாகவே நேர்காணல் நடத்தப்பட்டு அதன் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.
தடுப்பூசி செலுத்தாவிட்டால் கைது நடவடிக்கை – பிலிப்பைன்ஸ் அரசு எச்சரிக்கை!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சக்தி சுப்ரீம் ஐடியல் விகாஸ் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 10, 11 மற்றும் 12 ம் வகுப்பிற்கு முதுகலை ஆங்கிலம், விலங்கியல், மற்றும் தமிழ் முடித்த ஆசிரியர்களும், 1 முதல் 9ம் வகுப்பிற்கு ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுடன் பி.எட் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
அனுபவம் பெற்றவர்கள் அல்லது அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம். பள்ளியின் மின்னஞ்சல் முகவரியான [email protected] அல்லது 99423 17555 மற்றும் 96293 62283 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு மேலும் அதிக தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். பவானியிலிருந்து மைலம்பாடி ,ஒலகடம் செல்லும் வழியில் சங்கரகவுண்டன் பாளையம் பகுதியில் பள்ளி அமைத்துள்ளது.