தமிழக ஆசிரியர்களுக்கான “ஆசிரியர் மனசு” பெட்டி – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

4
தமிழக ஆசிரியர்களுக்கான
தமிழக ஆசிரியர்களுக்கான "ஆசிரியர் மனசு" பெட்டி - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
தமிழக ஆசிரியர்களுக்கான “ஆசிரியர் மனசு” பெட்டி – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களின் குறையை கேட்டறிய கல்வித் துறை அலுவலகங்களில் ஆசிரியர் மனசு என்ற பெட்டி வைக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் மனசு:

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 58 ஆயிரம் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் மொத்தமாக ஒரு கோடியே 3 லட்சம் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளிகளில் பணி புரிந்து வரும் ஆசிரியர்களின் குறைகளை கேட்டு சரி செய்வது ஒவ்வொரு அரசின் கடமையாகும். மேலும் மாணவர்களின் மனநிலையை புரிந்து கொள்வதும் அவசியமாகும். தற்போது மாணவர்கள் அதிகம் மன உளைச்சலில் இருப்பதால் சிறு விஷயத்தை கூட தாங்கி கொள்ளாமல் தற்கொலையை கையில் எடுக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

அதனை சரி செய்வது ஆசிரியர்களின் கடமையாகும். அந்த வகையில் ஆசிரியர்களின் தனிப்பட்ட புகார்களையும் குறைகளையும் தெரிவிக்கும் வகையில் புதிய திட்டம் தொடங்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதன் படி ஆசிரியர்கள் தங்கள் குறைகளை கூறுவதற்காக கல்வித்துறை அலுவலகத்தில் “ஆசிரியர் மனசு” என்ற பெட்டி வைக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

8 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ அலர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

நேற்று கோவை மாவட்டத்தில் நடந்த “அன்பில்” நம்மில் ஒருவர் என்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் ‘ ஆசிரியர் மனசு ‘ பெட்டி மூலம் மனுக்களை பெற்று கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அவர் தெரிவித்தார். அது மட்டுமில்லாமல் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் தேவையான வசதிகள் செய்து தரப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. இதனால் ஆசிரியர்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆசிரியர்களை ஆ சிறியர்களாக நடத்தும் நிலைமை மறைந்த தலைவரிடம் எப்போதும் இருந்த்து இல்லையே! இது மாறப்போவதும் இல்லை.

  2. மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் தரம் பிரித்தல் போல் வேலை பார்க்கும் இடத்தில் வேலை தெரிந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிகாரிகள் அரசியல்வாதிகள் ஆக உருவாக வேண்டும்.அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும்.

  3. ஐயா,
    அப்படியே குழந்தைகளுக்கும் இது போல ஒரு பெட்டி வைத்தால் நலமாக இருக்கும்… அரசு பள்ளிகளில் சரியாக பாடம் எடுப்பதில்லை அதை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்….

  4. முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் பெற்ற 43 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.அடுத்த தேர்வு வரை அவர்கள் காத்திருப்பது வேதனையான நிலை.இப்போது வாய்ப்பு கிடைக்கும்பட்சத்தில் 15ஆண்டுகள் பணியாவது கிடைக்கும்.மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பரிசீலனை செய்யவேண்டி தாழ்மையான கோரிக்கை வைக்கின்றோம்.நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!