தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.7500 முதல் ரூ.12000 சம்பளம்!
தமிழகத்தில் கடந்த ஜூன் 13ம் தேதி முதல் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள் அதிகளவில் தேவைப்படுகின்றனர். இந்த நிலையில் தற்போது 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 2022 -2023ம் ஆண்டிற்கான கல்வியாண்டு தொடங்கப்பட்டுள்ளது. அதனால் சில பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது ஆசிரியர் பணியிடத்திற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அரசு, நகராட்சி, மாநகராட்சி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை, முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடத்தில் 13000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளது. இதனை பதவி உயர்வு மற்றும் தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆனால் உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதால் பள்ளி மேலாண்மை குழு மூலமாக 8 மாதங்களுக்கு தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
தமிழக அரசு பள்ளிகளில் 13000+ ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 281 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனை தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த அறிவிப்பில், இப்பணியில் நியமிக்கப்படுவோருக்கு மாதந்தோறும் ரூ.7500 முதல் ரூ.12000 வரை மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் இப்பணியில் நியமிக்கப்படும் ஆசிரியர் பதவி உயர்வு மூலமாகவோ அல்லது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவோ நிரப்பப்படும் பொழுது பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.