தமிழகத்தில் ஜூன் 14 முதல் தேநீர், ஜவுளி கடைகள் திறப்பு? இன்று அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் வரும் ஜூன் 14 ஆம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு முடியவுள்ள நிலையில், மேலும் சில கட்டுப்பாடுகளை தளர்த்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தேநீர் மற்றும் ஜவுளி கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
கடைகள் திறப்பு:
கொரோனா பரவல் அதிகரித்து வந்ததை தொடர்ந்து மே மாதம் 10 ஆம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக முன்னதாக 35 ஆயிரம் வரை பதிவு செய்யப்பட்டு வந்த கொரோனா தினசரி பாதிப்பானது, தற்போது பாதியாக குறைந்துள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் ஜூன் 7 ஆம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கில், காய்கறி, மளிகை போன்ற அத்தியாவசிய கடைகள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி, தஞ்சையில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் – முதல்வர் இன்று ஆய்வு!!
மேலும் இத்தகைய கடைகள் மாலை 5 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அரசு அலுவலகங்கள் 30% பணியாளர்களுடன் சுழற்சி முறையில் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர மேலும் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 14 ஆம் தேதியுடன் அரசு விதித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின், தலைமை செயலர் இறையன்பு, காவல் ஆணையர் திரிபாதி உள்ளிட்டோர் நேற்று (ஜூன் 10) ஆலோசனையில் ஈடுபட்டனர்.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என உயரதிகாரிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி ஜூன் 15 ஆம் தேதிக்கு மேல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் தேநீர் கடைகள், நகை விற்பனை & ஜவுளி கடைகள், டாஸ்மாக் மதுபான போன்றவை திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்று (ஜூன் 11) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.