முடிவுக்கு வரும் WFH? 2021க்குள் அலுவலகத்திற்கு அழைக்க TCS திட்டம்!
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான TCS அதன் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களில் 70 முதல் 80% பேரை இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அலுவலகம் வரவழைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
WFH முடிவு
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உருவான கொரோனா பேரலையால் பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது பணியாளர்கள் வீடுகளில் இருந்து வேலை பார்க்கும் (WHF) ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தியது. இந்த WHF முறையானது கொரோனா 2 ஆம் அலை தொற்று காலத்திலும் தொடரப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று வேகம் படிப்படியாக குறைந்து வருவதற்கு மத்தியில் TCS போன்ற நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை அலுவலகம் வரவழைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வு தேதி அறிவிப்பு 2021 – தேர்வர்கள் எதிர்பார்ப்பு!
இந்த தகவல்களின் அடிப்படையில் தொற்றுநோய் பாதிப்புகள் வீழ்ச்சியின் காரணமாக ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு பிறகு ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான விதிமுறைகளை முடிவுக்கு வர உள்ளன. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி IT சேவைகள் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) இந்த ஆண்டு இறுதிக்குள் தனது 5 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இணைய சூதாட்டத்திற்கு தடை விதிப்பு – மாநில அரசு உத்தரவு!
இது தொடர்பாக TCS தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாதன் கூறுகையில், ‘2021 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 70-80% பணியாளர்களை அலுவலகத்திற்கு அழைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒருவேளை மூன்றாம் அலை தொற்றுக்கு மத்தியில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டால் இன்னும் சில வாரங்களுக்கு WFH முறை தொடரலாம்’ என தெரிவித்துள்ளார். இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமான TCS, சந்தை மூலதனத்தின் மூலம் கிட்டத்தட்ட 195 பில்லியன் டாலர்களை பெற்றுள்ளது. அதே நேரம் நாட்டின் மொத்த மென்பொருள் ஏற்றுமதிக்கு TCS கிட்டத்தட்ட 15% பங்களிப்பு செய்கிறது குறிப்பிடத்தக்கது.