முடிவுக்கு வரும் WFH முறை – TCS நிறுவனம் அறிவிப்பு!
இந்தியாவில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் அனைத்து ஊழியர்களும் அலுவலங்களுக்கு வர வேண்டும் என TCS நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இதற்கு பிறகு Work From Home முறை கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Work From Home:
இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டபோது அனைத்து ஐடி நிறுவன ஊழியர்களுக்கும் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறைய குறைய ஊழியர்களை நிறுவனங்கள் அலுவலகங்களுக்கு அழைத்து வந்தனர். ஆரம்பத்தில் மூத்த ஊழியர்கள் மட்டும் அலுவலகங்களுக்கு சென்று வேலைபார்த்து வந்தனர். பின்னர், கொஞ்சம் கொஞ்சமாக ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைக்கலாம் என திட்டமிட்டபோது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கிவிட்டது.
TNPSC யில் குரூப் 5A தேர்வு அறிவிப்பு – 161 காலிப்பணியிடங்கள்! முழு விவரம் இதோ!
பின்னர், வாரத்தில் இரண்டு நாட்களாவது ஊழியர்கள் அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் முழுமையாகவே வொர்க் ப்ரம் ஹோம் முறையை ரத்து செய்யலாம் என திட்டமிட்டுள்ளது. இதன்படி நவம்பர் மாதத்தில் இருந்து அனைத்து ஊழியர்களும் அலுவலகங்களுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதாவது, நவம்பர் 15 ஆம் தேதிக்குள் கண்டிப்பாக ஊழியர்கள் அலுவலகங்களுக்கு வந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 75% ஊழியர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியையும் செலுத்திவிட்டனர் என்பதை அறிந்த பிறகு தான் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் இத்தகைய முடிவை எடுத்துள்ளது. மேலும், கூடிய விரைவில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் ரிட்டர்ன்-டு-ஆஃபீஸ் மாடல் தொடரப்படும் எனவும், 25/25 திட்டத்தை மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் செயல்படுத்த வேண்டும் எனவும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் CEO தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்