TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – சம்பளம், தகுதி உள்ளிட்ட விவரங்கள் இதோ!
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான TCS தற்போது பொறியியல் பட்டதாரிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கான கல்வித்தகுதி, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை விரிவாக காணலாம்.
வேலை வாய்ப்புகள்
முன்னணி IT நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தனது ஆப் கேம்பஸ் டிஜிட்டல் பணியமர்த்தல் திட்டத்தின் கீழ் பொறியியல் பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பின் கீழ் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி பிப்ரவரி 25 என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (பிப்.16) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இப்போது இந்நிறுவனத்தில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதியின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட இருக்கிறது. என்றாலும் TCS அறிவித்துள்ள வேலை வாய்ப்பு அறிவிப்பின்படி, இளங்கலை பொறியியல் பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ.7 லட்சமும், முதுகலை முடித்தவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7.3 லட்சமும் சம்பளமாக வழங்கப்பட இருக்கிறது. இப்போது இப்பணிக்கான கல்வித்தகுதி, விண்ணப்பமுறைகள் குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.
கல்வித்தகுதி:
- விண்ணப்பதாரர்களுக்கு 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு தேர்வுகள் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் 70% அல்லது 7 CGPA மதிப்பெண்கள் அவசியம்.
- இதில் எந்தவொரு பின்னடைவும் இருக்கக்கூடாது.
- விண்ணப்பதாரர்கள் தகவல் தொழில்நுட்பத்துறையில் குறைந்தபட்சம் 6 முதல் 12 மாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரே தவணையில் ரூ.2 லட்சம் அகவிலைப்படி உயர்வு? முழு விவரம் இதோ!
- கல்வியில் ஏதேனும் இடைவெளி இருந்தால் அதனை விண்ணப்பதாரர்கள் முன் கூட்டியே அறிவிக்க வேண்டும்.
- அந்த வகையில் ஒட்டுமொத்த கல்வி இடைவெளி 24 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- முழு நேர படிப்புகள் கட்டாயமாக கருதப்படும்.
விண்ணப்ப முறை:
- விண்ணப்பதாரர்கள் TCSன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.
- இந்த விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பதாரர்கள் ‘Digtal Drive’ என்பதைக் கிளிக் செய்து செயல்முறையை முடிக்க வேண்டும்.
தேர்வு முறை:
- ஆன்லைன் தேர்வில் மேம்பட்ட அளவு திறன், வாய்மொழி திறன் மற்றும் மேம்பட்ட குறியீட்டு முறை ஆகியவற்றின் அடிப்படையில் கேள்விகள் இருக்கும்.
- தேர்வுக்கான காலம்: 110 நிமிடங்கள்.